கூடுதல் கவனம் மின்மினி
நெடிய புல்வெளியில்
புத்தர் மௌனம்.
கூர்வாள் நுனியிலும்
பேசலாம் சமாதானம்
மரணம் வெகுதூரம்.
கேட்டதுண்டா குரல்
மூங்கில் மரக்குயிலின்
உள்மன அழகு.
அகலத் தோரண வாயில்
இறுக்கம் சூழ்ந்திருக்க
ஏது வழி தும்பீ.
அடிக்கடி சோர்வு
அடுத்த முறையேனும்
வானவில் பிடித்தாகணும்.
அந்திப் பூவும் மலர்ந்தாச்சு
பாடாதே சங்கீதம்
சிள்வண்டு இசை சுகம்.
அமைதியின் பொருள்
அறிவாயோ நீ
காற்றில் குருதி வாசம்.

Pin It