கூடுதல் கவனம் மின்மினி
நெடிய புல்வெளியில்
புத்தர் மௌனம்.
கூர்வாள் நுனியிலும்
பேசலாம் சமாதானம்
மரணம் வெகுதூரம்.
கேட்டதுண்டா குரல்
மூங்கில் மரக்குயிலின்
உள்மன அழகு.
அகலத் தோரண வாயில்
இறுக்கம் சூழ்ந்திருக்க
ஏது வழி தும்பீ.
அடிக்கடி சோர்வு
அடுத்த முறையேனும்
வானவில் பிடித்தாகணும்.
அந்திப் பூவும் மலர்ந்தாச்சு
பாடாதே சங்கீதம்
சிள்வண்டு இசை சுகம்.
அமைதியின் பொருள்
அறிவாயோ நீ
காற்றில் குருதி வாசம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
அடவி - அக்டோபர் 2009
- விவரங்கள்
- நா.விச்வநாதன்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013