கழிவுகளை குடித்துவிட்டு
ஆணுறைகளை தன் மேல் போர்த்திக்
கொண்டு,
மரங்கள் இருந்த இடம் முழுவதும்
மக்காத குப்பைகளை தன்
மடியில் சுமந்து,
மனித கழிவுகளை மட்டுமே
மிச்சம் வைத்திருந்தது
என் பால்ய பருவத்தில்
நான் குளித்து மகிழ்ந்தும்,
குட்டி மீன் பிடித்தும்
விளையாடிய
அக்களிமண் ஏரி...!

Pin It