மடைதிறந்து
தண்ணீர் பாய்ச்சிய
மண்வெட்டி
கதிர் அறுத்து
களம் சேர்த்த
கருக்கரிவாள்
போரடித்து மூட்டைக்கட்டி
சுமந்து வந்த மாட்டுவண்டி
முப்போக வெள்ளாமையின்
நெல் மணிகளை
சுமந்து நின்றப் பத்தாயம் - என
இவைகள் யாவும்
நினைவுச் சின்னங்களாகிப் போயின
இன்று வளரும்
தளிர்களுக்கு...!

 

Pin It