உறவு முறைச் சொல்லி
உரிமையுடன் பேசுவது
ஒரு சிலர் பழக்கம்.
அவர்கள் பேசுவது கேட்கவே
ஆசையாக இருக்கும்
அப்படியே பேசுவாள்
எங்கள் தெரு பாட்டி.
அவள் வயதொத்தவளைக் கண்டால்
“அண்ணி கண்டுக்கவே மாட்டிங்கறியே”
என்பாள்.
இளையவர்களிடம் பேசும் போது
“என்னடி மவளே
மருமவன் நல்லா வைச்சிருக்கானா”
அக்கறையுடன் விசாரிப்பாள்.
விளையாடும் பையன்களிடம்
"பாட்டிகிட்ட
பேசமாட்டியா பேரான்டி'
என்பாள்.
தெருவில் இருப்போர், கடப்போர் என
எல்லோரையும் உறவாகவே
உரிமையுடன் பேசும் பாட்டி
பிள்ளைகளிடமிருந்து
கைவிடப்பட்டு தனித்தே
வாழ்கிறாள்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
அடவி - அக்டோபர் 2009
- விவரங்கள்
- பொன்.குமார்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஜூன் 2013