இந்த எழுத்துகள்
என்ன பாவம் செய்தனவோ
சிலரிடம் மாட்டிக்கொண்டு
விழிக்கின்றன.

நினைத்ததை எழுதாமல்
மறைக்க சில எழுத்துகள்
மறைக்க வேண்டியதை
வெளிச்சம் காட்ட சில!

பதுங்கிப் பதுங்கிப்
பயந்து கொண்டிருக்கும் சில!
குனியவன் மேலே இன்னும்
குட்டிக்களிக்கும் சில!

இதுதான் தெளிவென்று
புரியாமை கூறும் சில!
விளங்கவில்லையே என்றால்
போடா என மிரட்டும் சில!

வதைபடும் எழுத்துகள்
வாழ்விழந்து நிற்கின்றன.

Pin It