வேலிகளுக்குள்
மின்சாரம் பாய்ச்சி
தளிர்களைச் சருகாக்கி
வேர்களுக்குள்
அமிலம் ஊற்றி
விழுதுகளைச் சாம்பலாக்கி
செம்மாந்து நின்ற
விருட்சத்தை
மொட்டை மரமாக்கி
பிறப்பு மூலத்தை
நிர்மூலமாக்கி
சிங்கப்பல் பிதுக்கி
தாண்டவமாடிச் சென்றது
போதிமரத்து மோகினிப் பிசாசு
மத்தளம் கொட்டி
சாம்பிராணி புகைகாட்டி
மாலையிட்டு
மோகினி கையில்
சூலாயுதமும் அக்கினிச்சட்டியும் கொடுத்து
சேர்ந்தாடிக் களித்தது
இந்திரப்பிரஸ்தத்து
இரவல் புறா.
கழுகாய் மாறிட்ட
புறாவின்
உதிர்ந்த சிறகாய் மாறிய
சூரியப் பறவையோ
நங்கூரமிட்டு
நாற்காலியயனும் கூட்டில் கெட்டியாய்.
நாற்காலிக்கு மேலும் கீழும்
கனத்த பெட்டிகளுக்குள்
மூன்று சிங்க சிம்மாசன
காகித அரக்கனை சுமந்து
மூச்சு வாங்கியபடி.
விளம்பர இடைவேளைகள்
செல்லுலாய்டு புணர்ச்சிகள் நடுவே
எல்லாவற்றையும் கொறித்தபடிக்கு
எதுவுமற்று
நீங்களும் நானும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
அடவி - அக்டோபர் 2009
- விவரங்கள்
- இரா.காமராசு
- பிரிவு: கருக்கல் விடியும் - மார்ச் 2012