ஒரு பறவையின் சிறகு
உதிர்ந்து கிடக்கிறது.
உயரங்களில் ஊர்வலம் போன
மலரும் நினைவுகளில்
ஆழ்ந்தபடி...
பறவைக் கூட்டம்
கண்களை விட்டு மறைகையில்,
வானம் மட்டுமல்ல
மனசும் வெறுமையாகி விடுகிறது.
அந்திக்குக் கூடு திரும்பும் பறவை
பகலின் கடைசியழகு,
சிறகசைத்து விடைபெறுகிறது.
பறவைகள்
சுதந்திரத்தின் குறியீடு
அவற்றை மாமிசப் பார்வை பார்க்கிறது
அசைவ மனசு
மேகங்கள் வானத்தின்
அக அழகு,
பறவைகள் அதன்
புற அழகு.
உயரப் பறப்பதை எந்தப் பறவையும்
சாதனையாகக் கூறிக்கொள்வதில்லை
அதுவே அதன் இயல்பு.
இரையும் குடிநீரும்
தேடிக் களைத்த பறவைக்கு
இளைப்பாற வெயில் விரிந்த
கட்டிடங்களே இன்று மிச்சமிருக்கிறது
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்