வீசிய புயலில்
வேரறுந்த மாமரத்தில்
கூடுகட்டி வாழ்ந்த
குருவி ஒன்று
வட்டமடித்து
வட்டமடித்து
வந்து வந்து
தேடுகிறது
கண் விழிக்காத
தன் குஞ்சுகளை
பசித்த பருந்தொன்றுக்கு - அவை
விருந்தானது தெரியாமல்.

Pin It