மொத தடவ
எழுதிக்கொடுத்தது
காணாம பூடுச்சாம்

பத்து ரூபா கொடுத்து
வேற ஒண்ணு எழுதி
கண்ணாடி போட்டவரு
கையிலதான் குடுத்தேன்
ரெண்டு மாசம் கழிச்சு வந்தா
தாசில்தாரு இல்லியாம்.
அதுக்கடுத்த மாசம்
உள்ளியே போக முடியல
கட்சி ஆர்ப்பாட்டமாம்.
ஆறு மாசமா லோல்பட்டு
இன்னிக்கு வந்திருக்கேன்
டவாலிக்காரன் போ கெழவின்னு
வெரட்டிப்பாக்கறான்.
ரேசன் கார்டு வேணும்ல
அரிசி வாங்காட்டியும்
கிரைண்டர் வாங்கணும்ல.

Pin It