vinayagar sathurthi rally

கடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி பிறகு உயர்நீதிமன்றத்திலும் மனு போட்டு உயர்நீதி மன்ற உத்தரவின்படி காவல்துறை பாரதி ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. பாரதி ராஜா பேசியது ‘இந்து’க்களைப் புண்படுத்துகிறதாம். வரலாற்றைக் கூறுவதே மதத்தைப் புண்படுத்துவதாகி விடுமா?

இதற்கெல்லாம் ‘மனம் புண்படாதவர்கள்’, விநாயகன் வடநாட்டுக் கடவுள் என்று சொல்லியதற்காக ஏன் துடிக்கிறார்கள்?

பாரதிராஜா பார்ப்பன ராஜாக்களை எதிர்க்கிறார்; காவிரி உரிமைக்குப் போராடுகிறார்; பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக வீதிக்கு வருகிறார்; இதுதான் பாரதிராஜா மீது இவர்களுக்குள்ள ஆத்திரம்.

காவல்துறை, பாரதிராஜா மீது வழக்குப் போடுவது இருக்கட்டும்; முன் பினை மறுக்கப்பட்ட எஸ்.வி. சேகரை முதலில் கைது செய்து காட்டட்டும்.