இடிந்தகரையில் நடைபெற்று வரும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 800 ஆவது நாளை கடந்து எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் 800 ஆவது நாளான 23.102013 அன்று இடிந்தகரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணி யரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத் தின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து திட்டமிடும் வகையில் ஆதரவு இயக்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணியளவில் இடிந்தகரையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப.உதயகுமார் தலைமையேற்றார். பேராட்டக்குழு உறுப்பினர்கள் தோழர் புஷ்பராயன், முகிலன், மை.பா. சேசுராசு, அருட்தந்தை சேவியர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் திரு. கணேசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. கா.பரந்தாமன், த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தோழர் திவ்யா, சேவ் தமிழ்ஸ் இயக்கம் திரு. பரிமளா உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில், அனைத்துக் கட்சித் தலைவர் களின் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:

அக்டோபர் 23, 2013 அன்று இடிந்தகரையில் கூடிய நாங்கள் அனைவரும் கூடங்குளம் 1 மற்றும் 2 அணு உலைகள் பற்றி மத்திய அரசும், அதன் அணுசக்தித் துறையும், ஏனைய அரச அமைப்புக்களும் தமிழினப் பகை நோக்கோடு, தமிழ் மக்கள் உயிருக்கோ, ஈடுபாடு களுக்கோ கடுகளவும் மதிப்புக் கொடுக்காமல் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக, உண்மைக்குப் புறம்பாக தகவல்கள் வெளியிட்டு, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒரு மத்திய இணை அமைச்சர் இதுவரை 89 முறை “கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் இயங்கும்’’ என்று திரும்பத் திரும்பப் பொய் சொல்லி வருகிறார். இந்தி யப் பிரதமர் 2011 டிசம்பர் மாதமும், 2012 மார்ச் மாதமும் “கூடங்குளம் உடனடியாக இயங்கும்’’ என்று சொன்னார். தற்போது மின்சார உற்பத்தித் துவங்கி விட்டது என்று ஓர் அருவருப்பான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

“160 மெகாவாட் மின்சாரம் உற் பத்தியாகி விட்டது’’ என்று கூடங் குளம் அதிகாரிகள் சொல்லுகி றார்கள். ஆனால் மின் இணைப்பு அதிகாரிகள் “இரண்டாம் நிலை அமைப்பு தோல்வியடைந்து விட்டது’’ என்று தங்கள் இணைய தளத் தில் பதிவு செய்து, மின்சாரம் வந்த தாகக் குறிப்பிடவில்லை. சனநாயக நாட்டின் அரசு இப்படி தனது மக்களைத் தொடர்ந்து ஏமாற்று வது ஒரு மிகப் பெரிய ஆபத்தான விடயம்.

 கூடங்குளம் 1 & 2 அணு அலைகள் பற்றிய உண்மைத் தகவல் களை மக்களுக்குச் சொல்லி, ஆபத் தான நிலையில் இருக்கும், தரமற்றப் பொருட்களால் கட்டப் பட்டிருக் கும் அந்த நிலையங்களை நிரந்தர மாக மூட வேண்டும் என்று கூட் டாகக் கோரிக்கை வைக்கிறோம்.

முதலிரண்டு உலைகளே முடங்கிக் கிடக்கும் நிலையில், மூன்றாவது, நான்காவது உலைகளுக்கு ஒப்பந்தம் போடுவது என்பது மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை, தமிழினப் பகை நோக்கை இன்னும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்திய இழப்பீடுச் சட்டத்தை அவமதித்து, இரஷ்ய அர சுக்கு உதவும் பொருட்டு இந்த நட வடிக்கையில் இறங்குவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோருகிறோம்.

மத்திய அரசின், அதன் அணுசக்தித் துறையின் தமிழினப் பகைப் போக்கை எதிர்த்து நிற்கும், கூடங் குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடும் தமிழ் மக் களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு,போராட்டத்திடலில் போராட்டத்தின் 800ஆவது நாள் கூட்டம் நடைபெற்றது. கூட் டத்தை தோழர் முகிலன் ஒருங்கி ணைத்தார். இதில் பல்வேறு அமைப்புத் தலைவர்கள் உரை யாற்றினர்.

நிறைவாக த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தஞ்சை மாவட்ட த.தே.பொ.க. செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருண பாரதி, த.இ.மு. நடுவண் குழு உறுப் பினர் தோழர் தெட்சிணா மூர்த்தி, தோழர்கள் மு.வேலாயுதம், வெ.நாகராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Pin It