ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந்துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:

ஐ.நா. தோன்றுவதற்கு முன் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்.

ஸ்காட்லாந்து : 1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதியற்ற தாக்குதல்களி லிருந்து தற்காத்துக் கொள்ள ஸ்காட் லாந்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகட னத்தைத் தொடர்ந்து இரு நாடு களிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசரணை யாளராக செயற்பட்டு பேச்சுவாத்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல்கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது.

லத்தின் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள் : 1800 களின் தொடக்கத்தில் பிரெஞ்சு புரட்சி மற்றும் அமெரிக்க புரட்சிக் கான யுத்தங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்டன. 1810 மே 25 ஆம் நாளன்று ஸ்பெயி னின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சு படையணிகள், இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசாங் கத்தை அமைத்தது. அதனுடன் இணைந்து கொள்ளுமாறு இதர ஸ்பெயின் காலனி நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது. அப்போதைய ஸ்பெயின் காலனி நாடுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்தன. பிரெஞ்சினது கோரிக்கையை நிராகரித்த பராகுவே 1811 ஆம் ஆண்டு “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” அறிவித்தது.

1816 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாளன்று அர்ஜெண்டினா சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டது. அர்ஜெண் டினாவின் சுதந்திரப் பிரகடனத்தை 9 ஆண்டுகள் கழித்து 1825 ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது.

1822 ஆம் ஆண்டு போர்ச்சுகலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.

1825 ஆம் ஆண்டு பொலிவியா தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே அறிவித்தது.

1828 ஆம் ஆண்டு அர்ஜென்டினா - பிரேசில் யுத்தத்துக்குப் பின்னர் ஊருகுவேயும் தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தது.

மத்திய அமெரிக்க நாடுகள் : ஐக்கிய அமெரிக்க நாடுகள் உரு வானதைத் தொடர்ந்து 1823 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டது. இக்கூட்டமைப்பில் கோஸ்டா, ரிக்கா, எல் சல்வடோர், கௌதமாலா, ஹோண்டுரா, நிக்கரகுவா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. ஆனால் இக்கூட்டமைப்பிலிருந்து,

1838 ஆம் ஆண்டில் நிக்கரகுவா தானே பிரிந்து செல்வதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஹோண்டு ராஸ் மற்றும் கோஸ்ரா, ரிக்கா ஆகிய நாடுகளும் பிரிந்து சென்றன. இதனால் மத்திய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு 1840 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

எல்சவடோவர் நாடு தன்னை தானே சுதந்திர நாடாக 1841 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்துக் கொண்டது.

எஸ்தோனியா: எஸ்தோனியா தேசிய இன மக்கள் வரலாறு நெடுகிலும் தங்களது சுய நிர்ணய உரிமையை மாறி மாறி அமைந்த வரலாற்றுப் பேரரசுகளிடம் இழந் திருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ருசியப் பேரரசின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருந்தது எஸ்தோனியா. 1917 ஆம் ஆண்டு ரசியப் புரட்சி நடந்தது. அதன் பின்னர் ருசிய இராணுவத்துக்கு எதிராக ஜெர்மன் வெற்றி பெற்ற நிலையில் எஸ்தோனியாவின் மூத்த குடிமக்கள் “எஸ்தோனியா சுதந்திரப் பிரகடனத்தை 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி24 ஆம் நாள் வெளியிட்டனர். அந்தப் பிரகடனம் “எஸ்தோனியா” தேயி இனத்தின் சுய நிர்ணய உரிமையை உலகுக்கு அறிவித்தது. சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட பின்னர், சுதந்திரத்தக்கான போரை 2 ஆண்டுகாலம் எஸ்தோனியா நடத்தி யது. 1920 ஆம் ஆண்டு ருசியாவுக்கு எதிரான எஸ்தோனியாவின் யுத்தம் வெற்றியடைந்தது. எஸ்தோனியாவின் இந்த சுதந்திர வரலாறு நீடித்ததாக இல்லை. 1940 ஆம் ஆண்டு சோவியத் ருசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1990களின் இறுதியில் சோவியத் ருசியா உடைந்து நொறுக்கியபோது தனது சுதந்திர காற்றை எஸ்தோனியா சுவாசித்தது. இருப்பினும் 1918 ஆம் ஆண்டு எஸ்தோனியா வெளியிட்ட “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனம் தான்” அந்நாட்டின் வரலாற்றில் சுதந்திர பிரகடன ஆவணமாக இடம் பெற்றுள்ளது.

பின்லாந்து: எஸ்தோனியாவைப் போலவே 1917 ஆம் ஆண்டு ருசியப் புரட்சியைத் தொடர்ந்து பின்லாந்தும் தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாளன்று பின்லாந்தின் நாடாளுமன்றம் பின்லாந்தின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. அப்பிரகடனத்தை சோவியத்தின் உயர் நிர்வாக அமைப்பும் ஜெர்மனியும் ஸ்காண்டிநேவியன் நாடுகளும் டிசம்பர் 22 ஆம் நாளே அங்கீகரித்தன.

கினியா பிசாவு : மேற்கு ஆப்பிரிக்காவில் போர்த்துகீசிய காலனி நாடாக இருந்தது கினியா பிசாவு என்கிற நாடு. இதன் மொத்த மக்கள் தொகை 14 இலட்சம் பேர்தான். போர்த்துகீசியர்களின் அடிமை வர்த்தகத்துக்கான நாடாக இருந்த அந்நாட்டில் 1956 ஆம் ஆண்டு முதல் சுதந்திரத்துக்கான ஆயுத போராட்டக் குழு உருவானது. அந்நாட்டின் சுதந்திரப் போருக்கு கியூபா உதவியது.

1973 ஆம் ஆண்டு விடுதலைக்காகப் போராடிய ஆயுதக் குழுவின் கட்டுப் பாட்டில் அந்நாட்டின் பெரும் பகுதிகள் வந்தன. அதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள் ஒருதலைபட்சமான சுதந்திரப் பிரகடனத்தை அந்நாடு வெளியிட்டது.

1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் 93க்கு 7 என்ற வாக்குகளில் அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டது.

ஹைட்டி: பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்த ஹைட்டியானது 1805 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாளன்று தனது சுதந்திரப் பிரகடனத்தை தானே வெளியிட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதலாவது நாடாக சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது ஹைட்டி. ஆனால், 1915 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்த ஹைட்டியை ஆக்கிரமித்து அரசாட்சி செய்தது அமெரிக்கா. அதன் பின்னர் சுதந்திர நாடாக இயங்கி வருகிறது.

அமெரிக்கா : 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாளன்று அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை வெளி யிட்டது. வடஅமெரிக்காவில் பிரிட் டனுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 காலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு இடப் பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒருமித்த பிரகடனம்” என்பதாகும்.

இன்றளவும் அந்த ஜூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த சுதந்திர நாள் பிரகடனத்தை உருவாக்கிய வர்கள், தோமஸ் ஜெப்பர்சன், ஜோன் ஆதம்ஸ், பெஞ்சமின் பிராங்களின் ஆகியோராவர்.

இந்தோனேசியா : இந்தோனேசியாவை நெதர்லாந்து ஆக்கிரமித்து, அங்கே தனது காலனி நாடாக டச்சு நாட்டை ஏற்படுத்தியது. 20 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவுக் குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டச்சு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த இரண்டே நாள்களில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தோனேசியாவின் தேசிய வாதத் தலைவர் சுகர்னோ பிரகடனத்தை அறிவித்து அரச தலைவரானார். அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன பாணியில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இதே காலகட்டத்தில் நெதர் லாந்து மீண்டும் இந்தோனேசியாவை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனால் ஆயுத மற்றும் இராஜதந்திர மோதல்கள் ஏற்பட்டன. இது 1949 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தோனேசியாவின் சுதந்திரப் பிரகடனத்தை நெதர்லாந்து அங்கீகரித்தது.

(அடுத்த இதழில்)