போராட்ட வடிவங்களை சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிய சூழலில் ஆவேசத்தின் வெளிப்பாடாய் வெடித்துக் கிளம்பும் போராட்டங்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் சட்டங்களைப் புரட்டிக் கொண்டிருக்க முடியாது. 1965 இல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது தமிழகமே பற்றி எரிந்தது. மாதக்கணக்கில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்தன. ரயில்கள் தீ வைக்கப்பட்டன. காவல்துறை ஆய்வாளர் ஒருவரே உயிருடன் எரிக்கப்பட்டார். கலைஞர் கருணாநிதியை அன்றைய காங்கிரஸ்ஆட்சி பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது. பின்னர் 1967 இல் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன், வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
இந்தியை எதிர்த்து தமிழகத்தில் மூண்டெழுந்த ஆத்திரத்தின் ஆவேசத்தின் வெளிப்பாடாகவே அந்தப் போராட்டத்தை அவர் பார்த்தார். அதுதான் அண்ணாவின் அணுகுமுறை. அதேபோல் ஒவ்வொரு நாளும் ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும்போது இனப்படுகொலைக்கு உதவிட இந்தியாவின் ஆயுதம் போகிறதோ என்ற கொந்தளிப்பில் கொதித்து எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே இந்த இராணுவ வாகன மறிப்பையும், கலைஞர் பார்த்திருக்க வேண்டும். அதுதான் அண்ணா காட்டிய வழிமுறை. ராணுவத்துக்கு எதிராக ரகசிய திட்டம் தீட்டி நடத்தப்பட்ட போராட்டம் அல்ல அது. அதனால் தான் பத்திரிகையாளர்களுக்கும் தொலைக்காட்சியினருக்கும் தகவல் தெரிவித்து அங்கே வரச் சொல்லி இருக்கிறார்கள். இயக்கங்களைக் கடந்த பொது மக்களும், பெண்களும் ஆவேசமாய் இராணுவ வாகனங்களைத் தடுத்துள்ளனர். உணர்வுகள் வரம்பு மீறி விடாமல் தடுத்து நிறுத்தும் பொறுப்பான கடமையை கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்துள்ளார். உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படும் அண்ணாவின் அணுகுமுறையைக் கைவிட்டு, சட்டங்களைப் புரட்டும் அணுகுமுறையை இந்த அரசு கைவிட வேண்டும்; அது தமிழின உணர்வுக்கு எதிரான அணுகுமுறை.
- கோவை கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு
- சட்டமா? நம்பிக்கையா?
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?
- திருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு
- நெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்
- ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள்
- பரந்த பார்வைக்குள் பொடி விஷயம்!
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- விவரங்கள்
- எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2009
65-ல் இந்தி எதிர்ப்புக் கலவர வழக்கில் அண்ணாவின் அணுகுமுறை
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.