தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் சிறந்த பண்பாடுள்ள சமூகம்
- வரலாற்றியலாளர் டாயன்பீ
1
சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்றைக்குமான உண்மையாகி விடுவதில்லை. இன்று எல்லாமும் முடிந்துவிட்டதே இனி என்ன எழுத்தும் இலக்கியமும் என்ற அங்காலாய்ப்புக்கள்தான் எங்கும் விரவிநிற்கின்றன.
ஒரு வகையில் இந்த அங்கலாய்ப்பு இயல்பான ஒன்றுதான். தமிழர்களின் ஒட்டுமொத்த ஆற்றல், அறிவு வளங்கள் அனைத்தையும் தம்மை நோக்கி உள்வாங்கிக் கொண்டதொரு அமைப்பின் வீழ்ச்சி எந்தவொரு தமிழனுக்குமே அதிர்ச்சியையும் சோர்வையும்தான் கொடுக்கும். எனவே இந்தச் சூழலில் நாம் நமது பழைய கருத்துக்களை, நிலைப்பாடுகளை சற்று மீள்பரீசிலனை செய்து கொள்வது நல்லதுதானே. இது ஒரு வகையில் நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்ளுதல்தான். சுயவிமர்சனம் என்பது பெரும்பாலும் தற்கொலைக்கு ஒப்பானது என்றே சிலர் எண்ணுவதுண்டு, அதில் உண்மை இல்லாமலுமில்லை. தற்கொலை ஒரு மனிதனின் அதுவரையான இயக்கத்தை நிறுத்தும். சுயவிமர்சனமும் அதுவரைகால தவறுகளை விளங்கிக் கொண்டு புதியதொரு பாதையை வகுக்க உதவும்.
நான் இங்கு சமீபகாலமாக நம்மிடம் நிலவிவந்த ஆனால் இன்று ஒரு நகைச்சுவைக்குரிய ஒன்றாக மாறிவிட்ட நமது யூதக் கனவு பற்றித்தான் சில அபிப்பிராயங்களைப் பதிவு செய்ய விழைகின்றேன். நாம் நம்மை யூதர்களாக எண்ணிக் கொள்ளுவதற்கு ஏதுவாக என்னனென்ன காரணங்கள் இருந்தன என்று யோசித்துப் பார்த்தேன். யூதர்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறி வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். நாங்களும் அவ்வாறு சிங்களத்தின் ஒடுக்குமுறையால் உலகின் பல பாகங்களிலும் வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம். (நம்மில் ஒரு பகுதியினர் வெளிநாட்டு மோகம் கொண்டு எத்தனை லட்சங்கள் கொடுத்தாவது லண்டனுக்கோ கனடாவுக்கோ போய்விட வேண்டுமென்ற தீரா ஆசையில் ஓடியதும் உண்டு. அதை எந்த யூதக் கணக்கில் சேர்ப்பது?) யூதப் பெயர்வின் போது அவர்கள் தம்மை உலகளாவிய ரீதியில் ஒருமுகப்படுத்துவதற்காக பயன்படுத்திய புலம்பெயர் சமூகம் (Diaspora) என்ற கருத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டோம். இதன் மூலம் நாம் யூதர்களுக்கு இணையானவர்கள் என்றதொரு கருத்து வளர்ந்தது. நாம் கல்வியில் மேலோங்கிய சமூகம். இப்படியெல்லாம்தான் எங்களது யூதக் கனவு வளர்ந்தது.
இந்த கருத்தின் பின்னால் எடுபட்டுப் போனவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால் இப்போது நாம் இருக்கும் நிலையிலிருந்து சற்று திரும்பிப் பார்க்கும்போது அது நாம் தகுதியற்று வளர்த்துக் கொண்டதொரு கற்பனையென்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் நம்மை யூதர்களாக கற்பனை செய்து கொள்வதற்கான எந்தவொரு தகுதியும் நம்மிடமில்லை. அடிப்படையிலேயே ஈழத் தமிழர் சமூகம் தனக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளை கௌரவமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டதொரு சமூகம். சக மணிதர்களையே பறையன், பள்ளன், வண்ணான் எனப் பிரித்தாளுவதில் பெருமை கொண்டவர்கள் நாம். பின்னர் சாதி ரீதியாக பிரிந்து வளர்ந்த சமூகத்தினுள் விடுதலை சார்ந்து இயக்கங்கள் தோன்றிய போதும் விடுதலை அரசியலிலும் ஒரு வகைத்தான தீண்டாமைதான் நிலவியது. ஆளையாள் ஓரங்கட்டுதல், பிரித்தாளுதல் அல்லது அழித்தொழித்தல் என்பதாகவே நமது விடுதலை அரசியல் சுருங்கியது. இன்று கற்பனைகள் கலைந்து நடு வீதியில் திசையற்றுக் கிடப்பது நமது அரசியல் மட்டுமல்ல நன்பர்களே நமது யூதக் கனவும்தான்.
2
கல்வியில் நம்மை மிஞ்ச யாருண்டு என்ற யாழ்ப்பாண மத்தியதரவர்க்க செருக்கை உள்வாங்கி வளர்ந்த ஈழத் தமிழர்கள் கடந்த 60 வருடங்களாக சிங்கள இராஜதந்திரத்தின் முன்னால் படுதோல்வியடைந்திருப்பதே வரலாறு. மோட்டு சிங்களவர்கள் அவர்களுக்கு என்ன மசிரோ தெரியும் என்ற அரைவேக்காட்டுத்தனமான மத்தியதரவர்க்க மாயையில் நாம் காலத்தை கழித்திருக்கின்றோமே தவிர நம்மால் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. சிங்கள இராஜதந்திரம் பற்றி நம்மில் சிலரே வியந்து எழுதியிருக்கின்றனர். இது பற்றி அடிக்கடி தனது எழுத்துக்களில் பதிவு செய்தவர் நமக்கு நன்கு பரிச்சயமான ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு. அவர் அவ்வப்போது பேராசிரியர் இந்திரபாலா குறித்துரைக்கும் ஒரு கருத்தை நினைவுபடுத்துவதுண்டு. இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை பேணிப்பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு இராஜதந்திரம் தேவை. இராஜதந்திரம் இல்லாமல் அது ஓரு போதுமே சாத்தியப்படாது.
இன்று சிங்களம் தன்னை சுற்றி எழும் எத்தனையோ சவால்களை சமாளித்துக் கொண்டவாறு தன்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் லலித் அத்துலத் முதலி சொல்லுவது போன்று எங்களிடம் எம் மூதாதையர்கள் வழி வந்த இராஜதந்திர ஆற்றல் என்னும் பொக்கிசம் இருக்கிறது. இதனைத்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கோல்டண்திரட் (Golden thread) என்று வர்ணித்தார். ஆனால் நாங்களோ உலகப் போக்குகளை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப சிந்திக்க, செயற்பட திராணியற்றவர்களாகவே இருந்திருக்கிறோம். உசுப்பிவிடும் அரசியல், அதற்கான சுலோகங்கள், பின்னர் அதனைச் சுற்றி விமர்சனமற்ற கற்பனைகள் இதுதான் எங்கள் அரசியல். இது குறித்து யாரையும் நோக்கி விரல் சுட்டுவதல்ல எனது நோக்கம். நம்மை நாம் கற்பனைகளற்று சரியாக அளவிட்டுக் கொள்ளும் பண்பு நமக்குத் தேவை என்பதையே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்ட முயல்கிறது. அவ்வாறு அடுத்தவரை நோக்கி விரல் சுட்டுவதன் மூலம் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலும் எழுத்துக்களை இந்தக் கட்டுரை விமர்சிக்க முயல்கிறது.
இந்தக் கட்டுரையை எழுதும் நானும், என்னைப் போன்றவர்களுக்கும் இவ்வாறான கற்பனைகளை விமர்சனமற்று பரவ விட்டதில் பங்குண்டு என்னும் எழுத்து நேர்மையுடன்தான் எழுதுகின்றேன். பன்முக நோக்கில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்பது நம் மத்தியில் ஒரு பண்பாடாகவே வளர வேண்டியிருக்கிறது. வசை மற்றும் துதி பாடுவதில் திருப்தி, விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட வாழ்வை விவாதப் பொருளாக்கும் வக்கிரம் இவ்வாறான பண்புகளிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது.
நான் சமீபத்தில் சிறிலங்காவிற்கான முன்னைநாள் தூதராக இருந்த ஜெப்ரி லுன்ஸ்டேட் எழுதியிருந்த அறிக்கையொன்றைப் பார்த்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் இந்தத் தலைப்புடன் மிகவும் பொருந்தக் கூடிய ஒன்று. “அமெரிக்கா இலங்கை விடயத்தில் பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம், அமெரிக்க உள்ளக அரசியலில் (Domestic politics) செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு இலங்கை பிரஜைகள் அமெரிக்காவில் வலுவாக நிலைபெறவில்லை’. இதன் உள் அர்த்தம் அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகள் அமெரிக்க அரசியல் நிலைப்பாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சக்திகளாக இல்லை என்பதாகும். இந்த வாதத்தை அப்படியே யூதர்களுக்கு திருப்பிப் போட்டுப் பார்த்தால் எங்கள் யூதக் கனவின் பின்னாலுள்ள மடைமை வெள்ளிடைமலையாகும்.
யூதர்கள் எங்கெல்லாம் வாழுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களே முதன்மையானவர்களாக இருக்கிறார்கள் அறிவிலும் செல்வத்திலும். இதன் காரணமாக அவர்கள் அந்தந்த நாட்டின் உள்ளக அரசியலை நிர்ணயிக்கக் கூடிய மாற்றும் (Change the polticle Agenda) சக்திகளாக தொழிற்படுகின்றனர். அவர்களது ஆற்றலும் அறிவும் தேவைப்படும் அந்த நாடுகள் அவர்களை தமது நேச சக்திகளாக வைத்துக் கொள்வதில் மிகுந்த கரிசனையும் பெருமையும் கொள்கின்றன. இன்று இஸ்ரவேல் அமெரிக்காவின் வரலாற்றுக் கூட்டாளியாக இருக்கும் யதார்த்தத்தை இந்த பின்புலத்தில் நின்றுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமே அல்லாது வெற்று கோஷங்களை எழுப்புவதிலிருந்தோ வெறும் கற்பனைகளை தலைமுறைகள் சார்ந்து பரப்புவதாலோ அல்ல.
3
இந்தக் கட்டுரை எழுதத் தொடங்கியதும் சிறிது யூத வரலாறு அவர்களின் ஆளுமை குறித்து அறியும் நோக்கில் இணையத்தளங்களில் தேடினேன். யூதக் கனவில் திளைத்த நாம் யூத ஆளுமை, அறிவு பற்றியெல்லாம் எவ்வளவு தூரம் அறிய முற்பட்டிருந்தோம் என்பது வேறு விடயம். ஒரு வேளை அறிந்திருந்தால் தகுதி மீறிய கனவும் வளர்ந்திருக்காதோ என்னவோ! இன்று உலகின் மிகப் பெரும் ஆளுமைகளாக சிலாகிக்கப்படும் பலர் குறிப்பாக மார்க்ஸ் உட்பட பலரும் யூதர்கள் என்பது பலர் அறியாத ஒன்று. லூயிஸ் ரிகன்ஸ்டின் (Lewis Regenstein) என்பவர் எழுதிய யூதர்கள் ஏன் இவ்வளவு செழிப்பாக இருக்கின்றனர் (Why Are Jews So Smart?) கட்டுரையொன்றைப் பார்த்தேன். உலக சனத்தொகையில் மிகச் சிறிய வீதத்தைத் கொண்ட யூதர்கள் 21ஆம் நூற்றாண்டின் அறிவாற்றலில் எத்தகைய இடத்தை பெற்றிருக்கின்றனர் என்பதை சிறப்பாக குறிப்பிடுகின்றார். மிகச் சிறிய தொகையினரான யூதர்கள் நோபல் பரிசின் 32 வீதத்தை கைப்பற்றுபவர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை நமது கனவுடன் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். (Jews constitute only about two-tenths of one percent of the world’s population; Jews won 29 percent of the Nobel Prizes in literature, medicine, physics and chemistry in the second half of the 20th century. So far this century, the figure is 32 percent) - http://www.jewishmag.com/115mag/smartjews/smartjews.htm - (மேலதிகமாக அறிய இந்த இணையத்தைப் பார்க்கலாம்)
ஏன் இந்த விடயத்தைக் குறிப்பிடுகிறேன் என்றால் கனவு காண்பது பிழையல்ல. ஆனால் அந்தக் கனவை காண்பதற்கு நமக்கு தகுதியிருக்கின்றதா என்பதுதான் இங்கு பிரச்சனை. போலிப் பெருமைகளிலும், அர்த்தமற்ற சடங்குகளிலும், ஒழுக்கக் கோவைகளிலும் (இதிலும் போலித்தனம்தான் அதிகம்) காலத்தை கழிக்கும் நாம் எவ்வாறு யூதர்களுக்கு இணையாவது? அதிலும் வல்வெட்டித்துறை, உரும்பிராய் அளவெட்டி வந்தாறுமுலை கதைகள் அர்த்தமற்ற குலப் பெருமைகள். இப்படி அசிங்கங்களை பெருமையாக சுவைத்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன தகுதியிருக்கிறது இப்படியான கனவிற்கு?
1983களில் இருந்தே ஈழத் தமிழர்கள் பல்வேறு ஜரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயரத் தொடங்கிவிட்டனர். இன்று கிட்டத்தட்ட 25 வருடங்களைக் கடந்துவிட்டது நமது புலம்பெயர் வாழ்வு. இந்தச் சூழலில் அந்தந்த நாட்டின் சிந்தனைச் சூழலில், நமது சிந்தனைச் சூழல் விரிவு கொண்டிருக்கிறதா என்றால் நான் அறிந்தவரை அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கனவு மட்டும் அளவுக்கதிகமாகவே நம்மிடம் நிரம்பி வழிகிறது. இன்றும் அந்தந்த நாட்டின் அரசியல் சக்திகளுடனோ அல்லது சிந்தனையாளர்கள் மத்தியிலோ தாக்கம் செலுத்தக் கூடியவர்கள் உருவாகியிருக்கிறார்களா என்றால் இல்லையென்ற பதிலைத் தவிர எதுவுமே இல்லை. இப்போதுதான் ஏதோ ஞானோதோயம் பிறந்தது போல் சில அசைவுகள் தெரிகின்றன.
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இப்படியான இடங்களில் இருக்கும் உயர் இலக்கியவாதிகள், சிந்தனையாளர், அறிஞர்களோடு ஒரு உரையாடலையாவது எங்களால் செய்ய முடிந்திருக்கிறதா? பின்னர் எதற்கு இந்த வீண் கனவு நமக்கு?
முதலில் தகுதியை வளர்த்துக் கொள்வது பற்றி சிந்திப்போம். பின்னர் கனவுகளைக் காண்போம்.
- யதீந்திரா
சூரியதீபன்
Can the Author cite one Jew from India, or Ethiopia other under developed countries who has obtained a Nobel price. Jews have been all over the world. Even in Iran, Irag until very recently. At least more than oneTamil got Nobel price from India. C.V. Raman was the first Asian to get Nobel price in science, if I remeber correct. Do not compare apple with orange. Jews who had the advanced laboratories in Europe and America got the Nobel price. Many of my friends are working as professors in many ivy leaque Universities. Even the present President of the University of Alberta is a Tamil from Jaffna and studied with me in the University. Tamils in the advanced countries are now unable to concentrate fully on their personal advancement because the atrocities committed on the relatives back home. Our kids in the schools are doing well competing equally well with the other kids from various races while keeping good relationship with them. Two of my kids did very well in math contests and got invitations to the University of Ottawa Math Camp when they were at Grade10. Tamils did very well in education in Jaffna by their hardwork. Even parents refrained from asking household errants from those who are studying hard. It is a combined action of the community. Only those who had half baked knowledge claim that Tamils do well in studies without hardwork.
Sri Lanka has been the neighbour of India for the last 60years only. Under British, Sri Lanka was part of Madras province for some time. There was no India before the arrival of British. There were thousands of small states. Even Eellam Tamils had their own state. When Portugese and Dutch arrived Eellam Tamils were having their own state. Both Sinhalese and the Tamils lost to Colonisers along with India. Where is the political sagacity in this? In 1950, Percapita income of Japan was 80$ and that of Sri Lanka was $79. Where is Sri Lanka now? In 1970,s One Sri Lanka rupee fetched two Indian rupees. Where is now? Just the reverse! Sri Lanka is not managing anything but others, China, Pakistan and India are managing Sri Lanka. That is real story.
Easwaran
யூதர்கள் இடம்பெயர்ந்தது 2000 ஆண்டுகளுக்கு முன்பு. ஈழத்தமிழன் இடம் "பெயர்ந்து கொண்டிருப்பது" கடந்த 25 ஆண்டுகளாகத்தான் . எனவே, பாடம் படித்து ஞாணம் பெற இது ஒரு குறுகிய காலம். ஆனால், ஈழக் கனவு இப்போது முன்பைவிட வீறு கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா?
யூதர்கள் ஒரு உட்கார்ந்து பிழைக்கும் சமூகம். அதனால், அவர்கள் வாழந்த எல்லா நாடுகளிலும் வெறுக்கப் பட்டார்கள். பெல்ஜியத்தில் 150 வருடங்களுக்கு முன்பே, அவர்களுக்கெதிரா ன "ரிசர்வேசன்" முறை இருந்தது என்பது ஒரு சிறிய சான்று. ஆனால், தமிழர்கள் உழைக்கும் வரக்கம். சுரண்டும் வர்க்கமல்ல.
யூதர்கள் தங்களின் தனித்தன்மையை மட்டும் பாதுகாத்துக் கொண்டனர். ஆனால், ஈழத்தமிழன் இரண்டு கலாசாரங்களையும் பழகிக் கொண்டு, தஞ்சம் புகுந்த மண்ணிற்கான மனிதனாகவும் வாழ்கிறான். இது போற்றப்பட வேண்டிய விடயம்.
உலகிலேயே, தமிழ்ச்சமூகம் தான் தொன்மையானது. (சில ஆப்பிரிக்க சமூகங்களை வேண்டுமானால் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஐந்து திணை வாழ்க்கை போன்ற வரலாற்று நிகழ்வுகள், சாதிகளைத் தோற்று வித்தன. ஆனால், யூதர்கள் புதிய சமூகம். அங்கு சாதிகளில்லை. இங்கு கறுத்த தமிழ் நிலத்தில் நிகழ்த்தப்பட்ட வௌுத்த பிராமணனின் திருவிளையாடல்கள ், யூத சமூகத்தில் இல்லை. அவர்களும் வௌ்ளைத் தோலுடையவர்கள் என்பதால் அங்கு இது போன்ற வரலாற்றுப் பின்புலம் (தீண்டாமை) இல்லை. இந்த நிகழ்வுகளை நாம் சரியாக உணர்ந்தால், சாதிகளைக் கடந்த ஒன்றுபட்ட சமூகமாக உருமாற முடியும். அது இன்றய வரலாற்றுத் தேவை!
யூதர்கள் கொடிய சிந்தனைக்காரர்க ள். ஏசுவை வதைத்த புத்தி இன்றும் அவர்களை விட்டுப் போகவில்லை. அதனால் தான், பாலஸ்தீன மக்களைப் பாடாய்ப் படுத்துகின்றனர் . தமிழர்களுக்கு இந்தக் கொடிய சிந்தம் இல்லை. அது வேண்டவும் வேண்டாம்.
யூதர்கள் வௌ்ளைத் தோலுடையவர்கள். தமிழர்கள் கறுத்தவர்கள். நிற வேறுபாடும், ஒதுக்கலும் உலகில் உண்டு.
ஆனாலும், நமது கல்வி அறிவும், அறிவியல் அறிவும், நமது வளமான பொருளாதாரமும், நமது மனிதநேய சிந்தமும், பண்பாடும், நிச்சயமாக, தமிழருக்கு மட்டுமல்லாத, அனைத்துலகுக்கும ான ஒரு புதிய காலத்தை உருவாக்கும். நமது விடுதலையைப் பெற விரும்மும் நாம், உலக விடுதலைக்காகவும ் போராட வேண்டும்.
தமிழர்கள் ஒரு அறிய இனம். நம்முடைய குறைகளைக் களைந்து, பொது நன்மைக்காக போராடிக்கொண்டே நமது விடுதலைக்காகவும ் போராடினால், உலகம் நம்மை மதிக்கும்.
அது தான் நாம் செல்ல வேண்டிய புதிய பாதை!
ஈழப்போரில் தமிழர்களின் ராஜதந்திரம் குறைவற்றதே! சிங்களனுக்கு தனி நாடு இருந்தது. இந்தியா ஈழம் பிறக்கவே கூடாதென்று கங்கனம் கட்டி வேலை செய்தது. கனடா, சீனா. ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளும் பிரிவினைப் போரால் பாதிப்படைவதால், இவற்றின் இயல்பான துணையும் சிங்களனுக்கு கிடைத்தது.
தமிழருக்கு அன்றே சுயாட்சி உரிமை கொடுத்து, கூட்டாட்சி முறையைக் கொடுத்திருந்தால ் இந்த நாடு, இன்று உலகம் வியக்கும் நாடாகி இருக்கும். ஆனால், தமிழனை அழிக்கப்போய் தானும் அழிந்தது தான், சிங்களனின் இன்றய நிலை.
தமிழன் நிலைத்தைப் பறிக்கும் அவன், தனது நிலங்களை ஊரானுக்கெல்லாம் சூறை விட்டுக் கொண்டிருக்கிறான ். போரில் அவன் பெற்றி பெற்றாலும், தோல்வி அவனுக்கே! போரில் தோற்றாலும் இறுதி வெற்றி தமிழனுக்கே!
சிங்களன் கடைந்தெடுத்த முட்டாள். சிங்களன் உலக மகா அயோக்கியன். குள்ளநரித்தனத்த ைப் போற்ற வேண்டாமே!
எந்தக் கெட்டதிலும் சில நன்மைகள் உண்டு. தமிழர்கள் இனி, தத்துவார்த்த அறவிலும், அரசியல் அறிவிலும், அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும், பொருளாதாரத்திலு ம் சிறந்து விளங்க உறுதி பூணவேண்டும்.
அதன் மூலம் உலகக் கருத்தியலை நம் பக்கம் திருப்ப வேண்டும். தமிழகத் தமிழனும் இதில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
உண்மையிலேயே திட்டு வாங்கவேண்டிய நிலையில் தமிழகத் தமிழன் தான் உள்ளான். வந்தேறிகளை ஆளவிட்டு, அடிமையாய் வாழ்வதில் சுகம் காண்கிறான். தற்போது தான் அவனுக்கு உறைக்கத் தொடங்கியுள்ளது. அவன் முழுதாக மீள சில காலம் பிடிக்கலாம்.
Nan orumurai inkulla mukamukku chendran. Ankullavarkal katharinarkal,a yya inku chairman kooda oru thamil thamil eela athravudyiya munnettrak katchiyai chernthavarthan , anal oru murai kooda vanthathillai yendru. Karunanithiyai kurai solluvathtke ivarkal eelap piratchanaiyai payan padhukintrakal. Nan ketkintran ivatrkaludaiya ammavin eelap pasam yenna?.
நான் இங்கு ஈழத் தமிழர்களின் அறிவாற்றல் என்று குறிப்பிடுவது பல்கலைகழகத்தில் பட்டம் பெறுவதையோ அல்லது தமிழ் மாணவர்களின் வகுப்பறை கெட்டித்தனத்தைய ோ அல்ல. படிப்பு எனப்படுவது இவ்வாறான விடங்கள்தான் என்ற மாயையொன்று நம் சமூகத்தில் நீண்டகாலமாக நிலவி வருகிறது. சமீப காலங்களில்தான் யார் படித்தவன் என்றதொரு கருத்து தமிழ் புலமைச் சூழலில் ஓரளவாவது உரையாடப்பட்டிரு க்கிறது. தமிழகத்தில் இந்திரன் போன்றவர்கள் இது பற்றி பேசியிருக்கிறார ்கள் என்று நினைக்கிறேன். படிப்பு என்பது ஈழத் தமிழ் சமூகத்தைப் பொருத்தவரையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் , தோழர் பா.செ. சொல்வது போன்று வெள்ளாளர்கள் மத்தில் ஒரு அந்தஸ்த்தின் குறியீடாகப் பார்க்கப்பட்டதே யொழிய அறிவாற்றலின் வெளிப்பாடாகப் பார்க்கப்படவில் லை. இந்த நிலைமை காலப் போக்கில் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திலும் ஒரு நோய்க் கூறாகவே பரவியது எதைப் படித்தால் எங்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்து கிடைக்கும், எதைப் படித்ததால் எங்களை மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற கல்வியடிப்படையி லான அந்தஸ்த்து மோகம் காலப்போக்கில் அறிவாற்றலையும் புலமைத்துவ தேடலையும் இரண்டாம் பட்சமாக்கியது. இந்த பின்புலத்தில்தா ன் வைத்தியராக வேண்டும், பொறியியலாளராக வேண்டும் என்ற மோகமும் அதனை அடிப்படையாகக் கொண்டதொரு சமூக ஈடுபாடும் உருவாகியது. இந்த அந்தஸத்து சாாந்த கல்வி மோகம் மறுபுறமாக என்னவகையான பாதகத்தை ஏற்படுத்திய என்றால், ஈழத் தமிழர் சமூகத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் கலைகள் சார்ந்த துறைகளை அந்தஸ்த்தற்ற துறைகளாகவும், பயனற்ற துறைகளாகவும் கருதும் மனோபாவம் ஏற்பட்டது. ஒவ்வொரு புதிய தலைமுறையினர் மத்தியிலும் தொற்றி வளரும் இந்த மனநோய் இறுதியில் நமது சமூகத்தை உயிரற்ற சமூகமாக உருமாற்றியது. சாதாரணமாவே இந்த நிலைமையை ஈழத் தமிழ் பாடசாலைகளில் தெளிவாகப் பார்க்கலாம். கலைப்பிாிவில் படிக்கும் மாணவர்கள் எப்போதுமே கடைநிலையில்தான் நோக்கப்படுவார்க ள். ஏனைய துறைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்த ில் ஒரு சிறிதளவு கூட கலைப்பிாிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதி ல்லை. இந்த நிலைமை அப்படியே சமூகத்திற்கும் கடத்தப்படுகின்ற து. இன்றைய புதிய தலைமுறையினர் மத்தியில் சமூக விஞ்ஞானங்கள் சார்ந்த துறைகளெல்லாம் பணம் சம்பாதிக்க உதவாத அந்தஸ்தற்ற துறைகளாகவே மதிக்கப்படுகின் றன. இந்த நிலைமையை நாம் எவ்வாறு வளர்சியடைந்த நிலைமையென்று சொல்ல முடியும். இவ்வாறானதொரு கல்வியை எவ்வாறு சிறந்ததென்று நாம் கொண்டாட முடியும்? இந்த நிலைமை இறுதியில் படைபாற்றலற்ற சமூகத்தை உருவாக்கவே வழி வகுத்திருக்கிறத ு.
ஒரு முறை எதேச்சையாக ஒருவரை சந்தித்தேன். அவர் யாழ் பல்கலைக்கழகத்தி ல் தத்துவத் துறைக்கு தலைவராக இருந்த கலாநிதி.இராமகிஸ ்ணா. தான் நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கை வந்திருப்பதாகவு ம் தற்போது சிட்ணியில் வசிப்பதாகவும் கூறினார். அவர் கல்வி பற்றிக் கூறிய ஒரு விடயம் எனக்கு மிகவும் உடண்பாடாக இருந்தது ஏனென்றால் அது ஏலவே எணக்குள்ளும் இருந்தது. “ நாங்கள் தம்பி ஒரு காலத்தில் படிச்சவங்கள் என்று யாரையெல்லாம் எண்ணினமோ அவங்கள் எல்லாம் நாட்டவிட்டு ஓடிட்டாங்கள் ஆனால் யாரை படிக்காதவங்கள், மடையர்கள் என்றெல்லாம் சொன்னமோ அவங்கள்தான் இங்கயிருந்து ஏதோ இருக்கிறதை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாங ்கள். கல்வி என்றது என்ன? அவரவர் வேலைகளை செய்துவிட்டு ஓய்வு நேரங்களில் நல்ல அறிவுசார் நூல்களை தேடிப் படிக்கிறதுதான்”
உண்மையில் நாம் நமக்குள் உள்ளுக்குள்ளும் பரந்தும் சிந்திப்பதற்கான வழி வகைகள் குறித்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி பின்னப்படும் சவால்களை வெற்றி கொண்டவாறு நம்மால் முன்னோக்கி நகர முடியும். அவ்வாறில்லாது போனால் நம்மை நாமே புகழ்ந்தவாறு தேங்கித்தான் கிடப்போம். இது ஒரு சிந்தனை முறையாகவே நமது புதிய தலைமுறை மத்தியில் வளர்க்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் தமிழ் சமூகத்தில் வைத்தியர்களும் பொறியலாளர்களும் , கணக்காளர்களும்த ான் எஞ்சியிருப்பர். இறுதியில் நம் முன் ஒரு மலட்டுச் சமூகமே எஞ்சியிருக்கும் .
அடுத்தது சாதி இதைப் பற்றி பேசுவதும் எந்தவகையிலும் தமிழ் சமூகத்தை குறைத்து மதிப்பிடுவதாகாத ு. நம்முள் ஊடுருவியிருக்கு ம் ஒரு அசிங்கம் பற்றி போசாது விட்டால் அது நாளடைவில் நாற்றமெடுத்து நம்மையே மூச்சுத் தினறச் செய்யும். ஆயுத விடுதலைப் போராட்டம் அதன் உச்ச நிலையில் இருந்த காலத்தில் இவ்வாறான அகநிலை சிக்கல்களை முதன்மைப்படுத்த ுவது மறுபுறமாக போராட்டத்திற்கு குந்தகமானதான அமையும் என்ற வகையில் அவ்வாறான கருத்துக்களுக்க ு இது காலமல்ல என்று நானும்தான் எழுதியிருக்கிறே ன். அது சாியானதும் கூட. ஆனால் இப்போது நிலைமை வேறு. நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கான புள்ளியை எதுவெல்லாம் தடுக்கக் கூடுமோ அனைத்தையும் பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டியிருக்கின ்றது. அவ்வாறு பேசாது விட்டால் நமது ஒன்றிணைந்த செயற்பாடுகள் மேலும் மேலும் சிக்கலுக்குள்ளா கலாம். ஆனால் இந்த விடயங்களை வைத்துக் கொண்டு மட்டுமே மல்லுக் கட்டித்திாிபவர் களின் பிரச்சனை வேறு. நான் அவர்கள் பற்றி இங்கு கூறவில்லை.
அடுத்து, நன்பர் பாண்டியனின் கருத்துக்கள், அவர் சிங்கள ராஜதந்திரத்தை நான் அதிகம் சிலாகிப்பது போன்று குறிப்பிட்டிருக ்கிறார். அது குறித்து எனக்கு எந்த சிலாகிப்பும் இல்லை நன்பரே! ஆனால் அது குறித்த நமது அறியாமை குறித்து அல்லது அதன் பிரயோகம் குறித்த குறைமதிப்பீடு குறித்து எனக்கு ஆதங்கம் உண்டு. அவ்வளவுதான்
சிங்களவர்கள் எப்படியிருக்கிற ார்கள் அவர்கள் மீது யார் யாரெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்க ள் என்பதல்ல இங்கு விடயம். நாங்கள் எங்கு நிற்கிறோம்? விறுகொண்டு நிமிர்ந்த எங்கள் அரசியல் எங்கு நிற்கிறது? இவைதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டியவை.
ஈழத் தமிழர் அரசியல் போக்கில் பல படிமுறைகளை நாம் கடந்து வந்திருக்கிறோம் . மார்க்சிய வழிமுறை, காந்திய வழிமுறை இறுதியில்தான் ஆயுத வழிமுறை. இந்த வழிமுறைகள் எவற்றாலும் நமது இலக்கினை நெருங்க முடியாமல் போயிருக்கிறது. இந்த அனைத்து வழிமுறைகளும் சிங்களம் வகுத்த உபாயங்களின் முன்னால் தோல்வியடைந்திரு க்கின்றன என்பதே வரலாறு. இது ஒன்றும் இரகசியமானதல்ல. ஆகவேதான் இப்போது புதிய வழிமுறையொன்றை கண்டடைய வேண்டிய நிர்பந்தம் ஈழத் தமிழர்கள் மேல் என்று மில்லாதவாறு அழுத்தி நிற்கிறது. அது வெறும் கற்பனை கடலில் நீச்சலடிப்பது பற்றியதல்ல. நிஜக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது பற்றியது நாலாப்புறமும் சுறாக்கள் சூழந்த அந்த கடலில் வெறும் உணர்வை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது. நிதானமான இராஜதந்திர அணுகுமுறையே இங்கு தேவை. இராஜதந்திர ஆற்றல் மட்டுமே இங்கு எல்லா தடைகளையும் உடைக்கவல்லது. இராஜதந்திர ஆற்றல் வாய்ந்த சமூகமொன்று உருவாக வேண்டுமாயின் அதற்கு படைபாற்றல் மிக்க சிந்தனை முறை நம் மத்தியில் வளர வேண்டும். நமது தேடல் வாிவு பெற வேண்டும்.
எனவே நன்பர்களே நாம் தொடர்ந்தும் உரையாடுவோம் நமக்குள் கருத்து ாீதியாக முட்டி மோதி வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வோண்டாதவற்றை வீசியவாறு நம் உரையாடல் தொடரட்டும். இறதியில் அது நமக்கான வழியை ஒரு நாள் திறக்கும்.
இந்த 21ம் நூற்றாண்டிலும், குழந்தைகள் உட்பட பொதுமக்களைக் கொன்று, ஒரு விடுதலை இயக்கத்தைச் செயலிழக்கச் செய்வார்கள் என்று, எதிர்பார்ப்பது கடினம். அதுவும் இந்தியா என்ற காந்தி தேசம், இத்தகைய பச்சையான கொடூரத்தை இதுவரை செய்ததில்லை. இனிமேல் இந்தியாவைப்பற்ற ியும் சரியாக நம்மால் மதிப்பிட முடியும். நாம் குறைத்து மதிப்பிட்டோம் என்பதைவிட, இந்த உலகம் அதளபாதாளத்திற்க ு "தரம் குறைந்துள்ளது" என்பது தான் உண்மை!
ஈழம் என்பது இனி ஈழத்தமிழனின் கனவு மட்டுமல்ல. அது தமிழகத் தமிழனின் கனவும் கூட. எனவே, தமிழகத் தமிழரும், உலகெலாம் தாம் வாழும் நாடுகளில் உள்ள, அரசு மற்றும் மக்களின் கருத்தை தங்கள் பால் கவரக்கூடிய சக்திகளிடம் லாபி செய்யவேண்டும். அந்த சக்திகள் என்பது, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்க ள், கல்வியாளர்கள் என்பன. அதற்குறிய அனைத்துத் தகுதிகளையும், வாய்ப்புகளையும் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஈழ விடியலுக்கு தமிழகத் தமிழன் ஒரு முகாமையான திறவுகோல். உங்கள் பின்னூட்டத்தில் கண்டது போல, பலப்பல மடங்கு அதிக சிக்கல்களில் தமிழகத் தமிழன் மாட்டிக் கொண்டுள்ளான். அவனை மீட்டால் அனைத்தும் எளிதாகிவிடும். இப்போது இருக்கும் பாதகமான சூழல்களையும் தாண்டி, தமிழனை "மீட்கக்" கூடிய உத்தியை நாம் ஆய்ந்து உருவாக்க வேண்டும்.
முயற்சி திருவினையாக்கும ். அசாத்தியமான காரியங்கள் செய்வது பலத்தால் அல்ல. விடா முயற்சியால் தான்! ஒவ்வொரு படித்த தமிழனும் தொடர்ந்து சிந்தித்து செயலாற்ற வேண்டும்!
Those Jews who got Nobel prizes are the products of laboratories, same the as the doctors and engineers of Sri lanka from Sinhalese and Tamils. Personally I have no regards for the decisions of the Nobel prize commitees. Japan is an advanced country and they produced fewer Nobel laureates than Australians. What do you think of it? Obama, Simon Peres(Jew), Arafat etc. are Nobel prize winners? I am not sure whether it was Simon Peres( my memory is not very sharp now but take it as the Israeli prime Minister who got the Nobel prize along with Arafat.)
No one is studying just to study, in all the communities. However, some tradition goes along with the community. Tamils use to say Ennum Elluthum Kannennath Thagum. Tamils considered it a pride to do well in Math and they tried very hard.
Do not confuse the issue. In Jaffna, students from all casts try to enter Engineering or medicine. I am very proud to say that as an Engineer, I woked under a so called lower caste Engineer. Both of us qualified from the same university. Jaffna men and women were very happy when their kids get admission to Either Engineering or medicine. It was really difficult. When I sat for the exam in 1968, only 125 were admiited to engineering from the whole country. It is not the money, it is the hard work and the society respected the hard work. However the Sinhalese Government refused to recognize the students who passed the exam set by the Government it self. With globalization, the trend is changing. My son went to Computer science but my daughter is studying Business in her first year. Both had better averages to go to any field. My next daughter is in Grade 12 and we have not forced to go to any field. Her average too is very good but we are anxious to know the field she is planning but we have not yet forced her go to any field. You take the privillage of praising the Nobel prize winners from the Jewish community but ready to critize the Eellam Tamils to be proud of their hard working boys and girls. I do not want to write more but I would like to add one aspect. Everyone is now accusing Eellam Tamils after the defeat of LTTE. I was very critical of Pirabhakaran before, not now. It was his foolishness to kill Rajiv. Not that Rajiv was a saint. He was a mass murder responsible for the killing of about 5000 Jaffna Tamils(mostly from Valligaammam) through the use of Shanthi Sena(IPKF). He was a downright murderer. My fellow engineer, one Nithyaratnam was murdererd during that time. It was the Shanthi Sena(IPKF) taught LTTE to forcefully recruit youngsters. LTTE used to have interviews and they used to reject many in those days. When Premadasa asked IPKF to button their pants from raping and to leave Sri Lanka, they forcefully hunted down young boys who happened to be on the streets and gave rudimentary training and rudimentary weapons and left. The moment IPKF left, more than 3000 youngsters who were forcefully trained by IPKF were murdered by LTTE. This 3000 plus 5000 I already mentioned are the direct result of murderer Rajiv. However, this gave the Indian establishment to work openly against Eellam Tamils. This is where Pirabhakaran and his advisor Balasingham miserably failed. Eellam Tamils were cornered by India, Pakistan, China, Iran etc. This is the case of Valluvar " Kootrudando varinum Koodi ethirkum aatral..." It is not over. From Mavilaru to Mullivaykal, there was no hand to hand fight between LTTE and Sri Lanka security forces. Sri Lanka security forces started using long range weapons supplied by India, Pakistan, China, Iran etc. LTTE tried to counter it by bringing in the same kind of weapons to force direct combat. Then India intervened to destroy the shipments and gave the credits to Sri Lanka army. One cannot hunt with the hounds and run with hares for long. Tamils have the guts to confront god itself: Netrik Kannaik kaadinalum kuttram kutrame, then another one " Nam yaarkum kudiyallom.., yet another one " Mannavanum neeyo ... vallanadum unnatho... They are not narrow minded lot too to say long ago " Yaathum oore Yavaru kelir.." We do not forget and I wanted to name my son Kanniyan but my wife objected,I did not force. I named my daughter Sangavai because I did not want forget those two girls Angavai & Sangavai. Auyvaiyar went against the kings to get those two girls married. Famous Raja Rajan did not use his mighty army to force Thillai Vaal anthanargal to give the Ollaich suvadigal. He devised an intelligent way to get those suvadigal so that I can quote the verse "Nam Yaarkum kudiyallom.." Another king, Kulothungachcho lan fanned Saamaram to pulavar Sekilar. Eellathu king Ellalan, 80years old, agreed to fight twenty odd year Thuttagemunu to avoid death of soldiers. Sinhalese cheated Ellalan 2000 years ago and have been cheating Tamils continuously, killing Tamils continuously. Tamils no more believe India, no more trust Sinhalese and no more innocent like Ellalan. You can be happy with Sinhalese political ingenuity, but I am not, more than 2million Sri Lankan ladies are working as slaves to Arabs in Middle East and the Government is using their money to wage war on its own citizen. Only a despicable lot can do this. 30million population is having an army of 300000. Along other forces it is about 500000. One in 60 is bearing arms. Can they sustain it? They should send more ladies to Middle East and you will applaud it. Great.
Thankyou for touching very important and sensitive issues. Though I dont completly agree with you over the comparison of Tamils with Jews but I really appreciate your effort in pointing out the lack of diplomacy among Tamils. There is no doubt we are good engineers, doctors and we have ancient history but when come to Diplomacy we lack.
Dream to become as Jews is really a positive effort but not only on the matter of Diaspora. Think about the positive life style and determination of Jews. Let us learn from them. let us break away from our caste and Religion system which cripples our progress.
I am sure we are eligible to have this Dream, this dream will be a reality one day.
RSS feed for comments to this post