பா.ஜ.க. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணி யில் காஞ்சி காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயி லில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி உலக நன்மை வேண்டி ஸ்ரீதச மஹா வித்யா ஹோமம் தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலர் முரளிதர ராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக் கொண்டு மார்ச் 26 ஆம் தேதி டெல்லியில் உள்ள மோடியை  சந்தித்து கொடுத்துள்ளார். பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டுப் புடவையும் இருந்துள்ளது.

இந்த பட்டுப் புடவையை கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, “இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள்” என்று மோடியிடம் கூறினாராம். சற்று மௌனம் காத்து, பின்னர் வியந்துபோய் நரேந்திர மோடி பிரசாதத்தை பெற்றுக் கொண்டாராம். அம்பாள் பக்தரான நரேந்திர மோடி, காமாட்சியம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதையும், அதை அவரது மனைவியிடம் கொடுக்குமாறு கூறியதையும் காமாட்சியம்மனின் உத்தரவாக எடுத்துக் கொண்டார். அதன் பிறகே வேட்புமனு தாக்கலின்போது, தனது மனைவியின் பெயரை குறிப்பிட்டார் என்று அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து நடராஜ சாஸ்திரியிடம் கேட்டபோது, நரேந்திர மோடியை சந்தித்ததும், அவருக்கு அம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதும் உண்மை. இதன் பின்னரே அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டு மனைவி பெயரைத் தெரிவி துள்ளார் என்றார் அவர்.  ‘தமிழ் இந்து’ நாளேடு (ஏப்.15) இதை வெளியிட்டுள்ளது.