விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளுக்கு, மரியாதை செலுத்தும் மாவீரர் நாள் 1989 ஆம் ஆண்டு முதல் தான் தொடங்கியது. முதல் மாவீரர் நாளில் விடுதலைப் புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் உரை யாற்றினார்.

இந்திய தமிழீழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடு தலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989, கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப் புலிப் போராளி வீரச்சாவு நாளான கார்த்திகை 27ஐ மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும்போது, “எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாள், இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1207 போராளிகளை நினைவுகூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படை வீரர்களின், பாதுகாப்புக்காக போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாட்களை கொண்டாடுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும், இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், இந்த வருடத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத் தில் ஒருநாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே - மாவீரர் நாள் - ஆகப் பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது, எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த - சங்கரின் - நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதி யானவர்கள் இப்படிப்பட்டவர்களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளி களும் சமம் என்னும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு எடுத்துள் ளோம்.

அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம். வீரச்சாவு அடைந்த எல்லா போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக நினைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம். இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போவதை தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவுகூரப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாவீரர் நாளைக் கொண்டாட முடிவெடுத்தோம். ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும் அறிவாளிகளை யும் பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாக மாறி அழிந்துவிடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக் கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்கள் இனத்தில் பெண்கள் புனிதமாக மதிக்கப் படுகிறார்கள். அதே வேளை வீரர்களுக்குத்தான் பஞ்சமாக இருந்தது. ஆனால், இன்று இந்த மாவீரர் நாளில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம், எமது வீரர்களைக்கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம்.

இதுவரைக் காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவுகூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே, இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலைநிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1207 போராளிகளின் உயிர்த் தியாகம் தான். அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தி யுள்ளது.

எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக கருதி இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட உள்ளோம்”.

Pin It