தமிழ்மொழியை இகழ்கின்றான்; தமிழர் தம்மைத்
தாழ்ந்தவர் என்றிகழ்கின்றான்; தமிழப் பெண்டிர்
தமது நலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத்
தான் உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும்
சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச்
சொன்னாலும் கேட்பதில்லை, அந்தோ! அந்தோ!
வீணரல்ல யாம்; தமிழை இகழ்ந்தோர் வாழ்வின்
சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே!
-------------------------------------

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா