jaya_225

ஏதுமறியாத என்னை ஏமாற்றவோ
ஏய்ச்சிப்புழைக்கவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய்
திருவிழாவில் காணாது போன அப்பாவிக் குழந்தையாய்
முழிக்கும் என்னை ஏமாற்றுவதும் உனக்கு
கைவந்த ஏமாத்து வேலையாக இருக்கும்
ஒரு கணம் நான் சுதாரிக்கும்போது
தொங்குவதற்கு கயிரற்று மரமற்று
முருங்கமரத்தின் உச்சாங்கிளையில்
பூணூலில் தொங்கும் மரணம் உன்னால் நிகழ்த்தப்படக்கூடும்

 -ஜெயபிரகாஷ்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It