periyar nathigan chinnatambiஒரு குடித்தனக்காரன்: ஐயா ஆ ஆ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கு புண்ணியமாகும்.

சித்ரபுத்ரன் : ஐயய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?

குடி : ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா?

சித்தி : அப்படியானால் உங்கள் வீதியில் ‘பிராமணாள்’ இருக்கின்றார்களா ?

குடி : ஆம் 4, 5 வீட்டுக்காரர்கள் இருக்கின்றார்கள்.

சித்தி : அவர்கள் ஏதாவது உங்கள் வீதி பக்கம் வந்தார்களா?

குடி : ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்குபோய் குளித்துவிட்டு மொண மொணா என்று சொல்லிக் கொண்டு இந்த வீதியில்தான் போனார்.

சித்தி : சரி சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்து போனதற்குக் காரணம் தெரிந்துபோயிற்று.

குடி : என்ன அய்யா எனக்கு தெரியவில்லையே!

சித்தி : இது தெரியாதா உனக்கு; பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா.

குடி : நான் கேட்டதில்லையே!

சித்தி : அட பயித்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எறிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.

குடி : அப்படியா! அது எனக்கு தெரிந்திருந்தால் நான் அவர்களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய்விட்டேன்.

சித்தி : அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும் நெருப்பு, வயிற்றிலும் நெருப்பு; இது உனக்குத் தெரியாதா?

குடித் : தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங்களேன்.

சித்தி : பிராமணாள் ‘எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய் போய் விடுவாய்’ என்று சொல்லுகிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்பதால்தானே அவர்கள் அப்படிச் சொல்வது. தவிரவும், பிராமணாள் நம்மைப் பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார்களே அதன் அருத்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லாவிட்டால் முடியுமா?

குடி : இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது. இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவதானால் இந்த நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய் விடும் போலிருக்கிறதே.

சித்தி : பின்னை தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராமணர்களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள்.

குடி : ஓ! ஹோ!! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல்லுகின்றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்ளுகிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்து விடுங்களய்யா.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது, குடி அரசு - உரையாடல் - 18.03.1928)