periyar annaaசர்.பி. ராஜகோபாலாச்சாரியார் பெங்களூரில் காலமானதாகக் கேட்டு வருத்தமடைகிறோம்.

அவர் வித்தியாசம் பாராட்டாதவர். மூடக் கொள்கைகளில் நம்பிக்கையில்லாதவர். உத்தியோகத்திலும் கூடுமானவரை யோக்கியமாய் நடந்து கொண்டவர். பார்ப்பனரல்லாதார் அநேகரின் அன்புக்கும் விஸ்வாசத்திற்கும் பாத்திரமாயிருந்தவர். உத்தியோக முறையில் பார்ப்பனரல்லாதாருக்கு சிறிதாவது நன்மை செய்த பார்ப்பனர் இருப்பாரானால் அதில் ஸ்ரீமான் சர். பி. ராஜ கோபாலாச்சாரியாரே முதன்மையானவர். அவரது குடும்பத்திற்கு நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - இரங்கலுரை - 04.12.1927)