தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 250 கிராம்
பால் - 200 மி.லி.
சர்க்கரை - 500 கிராம்
நெய் - 800 மி.லி.
ஏலக்காய் - 5 

செய்முறை:

பாதாம் பருப்பை நன்றாக ஊறவைத்து, பின்பு அதை தோல் நீக்கி அரைக்க வேண்டும். அரைத்த விழுதை பாலில் கரைக்க வேண்டும்.வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்க வேண்டும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கைபடாமல் கிளற வேண்டும். கிளறும்போதே கேசரிப் பௌடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்வா பதமாக வரும்போது இறக்கி வைத்து விடவும்
.