தேவையான பொருட்கள்:

நெத்திலிக் கருவாடு - 30
மொச்சைக் கொட்டை - அரை கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
கத்திரிக்காய் - 2
முருங்கைக்காய் - 3
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மல்லி தூள் - 2 மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

சின்ன வெங்காயத்தை இரண்டாகவும், கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்க வேண்டும். முருங்கைக்காயை இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியை நான்கு பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மொச்சைக் கொட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியில் 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு கலக்கி வைக்க வேண்டும். அதிலேயே இரண்டாக கீறின் பச்சை மிளகாய், நறுக்கின தக்காளி, வறுத்து எடுத்த மொச்சை சேர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் தாளித்து பின்னர் நறுக்கின சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்ற வேண்டும்.அத்துடன் நறுக்கின கத்திரிக்காய், முருங்கைக்காய் துண்டங்களை சேர்க்க வேண்டும். வாணலியை மூடி வைத்து வேகவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் கொதிக்கும் குழம்பில் கருவாட்டைச் சேர்க்கவும். லேசாக கிளறிவிட்டு வேகவிட வேண்டும்.