அந்தப் பொருட்களை எடுத்துச் செல்லுமாறு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம். பதிவுத்தபாலில் கடிதமும் போடலாம். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் பொருட்களை எடுத்துச் செல்லவில்லை எனில் ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அப்பொருட்கள் அளிக்கப்படும் என்று எழுதலாம். அந்தக் கெடுவுக்குப் பிறகு, அவற்றை ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அளித்துவிட்டு, அதற்கான அத்தாட்சி வாங்கி வைத்துக் கொண்டால், பயமின்றி இருக்கலாம்.

(நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்)