சட்டப்படி இந்தத் திருமணம் செல்லாது. மணமகன், மணமகள் இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால்தான் இந்து திருமணச் சட்டப்படி அத்திருமணம் செல்லும். அல்லது பெண் மதம் மாறி இஸ்லாமிய முறைப்படி ‘நிக்காஹ்’ செய்திருக்க வேண்டும். இருவரும் மதம் மாறாத நிலையில், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இதை பதிவு செய்திருக்க வேண்டும். இப்போதுகூட அவர்கள் இவ்வாறு பதிவு செய்யலாம். அதன் பிறகு அந்தச் சட்டப்படி இருவரும் மனமொத்த விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்யலாம்.