19ம் நூற்றாண்டின் முற்பகுதி. இத்தாலி நாடு தமது இலக்கியப் பணியால் மட்டுமே விடுதலைப் பெற்றுவிட முடியாது என்பதை அனுவப்பூர்வமாக உணர்ந்த எழுத்தாளர் மாஜினி நேரடி புரட்சி இயக்கத்தில் ஐக்கியமாக விரும்பினார். முதலில் கார்போனோரி இயக்கத்தில் மாஜினி சேர்ந்து தீவிரமாக செயல்பட்டார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த இயக்கம் புரட்சிகரமாக இல்லாத்தால்இத்தாலிய இளைஞர் சங்கம்என்ற புதிய புரட்சிகர அமைப்பை மாஜினி உருவாக்கினார்.

இந்த இயக்கத் தலைவராக இருந்து அவர் மேற்கொணட புரட்சிகர நடவடிக்கைகளைக் கண்டி இத்தாலி அரசாங்கம் மிரண்டு போனது. மாஜினியைக் கைது செய்து ஆறு மாத காலம் சிறையில் தள்ளியது. ஆறு மாத சிறை வாசத்திற்குப் பின் மாஜினி இத்தாலியில் இருக்கக் கூடாது என்று அரசாங்கம் நிபந்தனை விதித்தது. மாஜினி மார்க்சேல்சுக்கு சென்றார்.

மாஜினி சிறையில் இருந்த ஆறு மாத காலத்தில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்க பல செயல் திட்டங்களை மனதுக்குள் வரைந்து வைத்திருந்தார். பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளும் இத்தாலியை ரோம், நேப்பிள்ஸ், மிலான் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து தங்களுக்குள் பங்கு போட்டு அடக்கியாண்டு வந்தன.

உலகின் மிகப் பெரிய வல்லரசுகளான அந்த நாடுகளிடமிருந்து இத்தாலியைக் காப்பாற்றுவதென்பது சாதாரணப் பணியல்ல என்று மாஜினி புரிந்து வைத்திருந்தார். ஆகையால் இத்தாலி சென்று ஒரு கொரில்லாப் படையை உருவாக்க வேண்டும் என்று போனார். அங்கே ஒரு புதிய பத்திரிக்கையையும் தொடங்கி புரட்சிகரமான கட்டுரைகளை எழுதினார் மாஜினி. இத்தாலியின் வாலிபப் பட்டாளம் மாஜினியின் புரட்சிகர எழுத்துக்களால் ஆட்சியாளர்கள் மீது பாயத் தொடங்கின.

மாஜினி துவங்கிய புரட்சித்தீ ஆட்சியாளர்களை சினம் கொள்ளச் செய்தது. மாஜினியின் புரட்சிப்படை வீரர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். மாஜினியைப் பிடித்து தூக்கிலிட்டால் மட்டுமே தங்களது ஆட்சி நிலைக்கும் என்று மாஜினியை தேடிப் பேயாய் அலைந்தது அரசு.

மாஜினி நெப்போலியன் பிறந்த கார்சிகா தீவுக்குச் சென்று தலைமறைவாகத் திரிந்தார். அங்கு அவரது சூறாவளிப் பேச்சுக்கு இளைஞர் வசமாயினர். ஒரு படையைத் திரட்டினார். இத்தாலி விடுதலை அடையும்வரை இளைஞர்கள் கருப்புச்சட்டைதான் அணிய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அச்சமயம் சார்டீனியா தீவின் அரசனாக சார்லஸ் ஆல்பர்ட் என்பவன் ஆட்சியைப் பிடித்து ஆண்டு வந்தான். சார்லஸ் ஆல்பர்ட் ஒரு காலத்தில் மாஜினியின் நண்பனாக இருந்தவன். 1821ம் ஆண்டில் கார்ப்பனோரா கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு மாஜினியோடு சிறை வாழ்க்கை அனுபவித்தான் இந்த சார்லஸ் ஆல்பர்ட்.

இப்போது தம்முடைய விடுதலைப் போருக்கான உதவியை தன்னுடைய பழைய நண்பரும் இப்போதைய சார்டீனியா தீவு மன்னருமாகிய சார்லஸ் ஆல்பர்ட்டிடம் கேட்கலாம் என முடிவு செய்து, கேட்டார் மாஜினி. ஆனால் புரட்சியாளனாக இருந்தபோது நண்பனாக இருந்த சார்லஸ் ஆல்பர்ட் அதிகார மமதையில் இருந்தான். மாஜினி தனக்கு அனுப்பிய கடித்தில்அன்புள்ள சார்லஸ்என்று பெயரைச் சொல்லி அழைத்ததில் தனக்கு தன்மான இழுக்கு ஏற்பட்டதாகவும் கருதினான்.

மாஜினிக்கு உதவும் எண்ணமே இல்லாமல் இருந்த சார்லஸ் மாஜினியை உடனே நாடு கடத்தும்படி தன்னுடைய ராணுவப் படையினருக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவு மாஜினிக்கு இழைக்கப்படும் துரோகம் என்று சார்லஸ் மன்னனின் படை வீர்ர்களே கொந்தளித்துக் கூறியதுடன் மன்னனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சார்லஸ் இதனால் கடுஞ்சினமுற்று மாஜினியை சிறை செய்து குற்றம் சுமத்தினான். போராட்டத்திற்கான முழுப் பொறுப்பும் மாஜினியிடையதுதான் என்றும் அதற்கு சரியான தண்டணை தூக்கு தண்டனைதான் என்று தீர்ப்பளித்தான். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டி சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட மாஜினி, தூக்கிலிடும்முன் தப்பித்துவிட்டார்

தப்பி ஓடிய மாஜினிமத்திய ஐரோப்பாஎனும் பத்திரிக்கையை துவங்கி கட்டுரைகள் எழுதினார். எங்கு பார்த்தாலும் இவரது கோஷம் கேட்டு மக்கள் சிலிர்த்தெழுந்தனர். சேவாய் நகருக்குள் மாஜினியின் படை புகுந்து ஆர்பரித்தது. அரசாங்கம் அடிபணிந்தது.

மன்னன் சார்லஸ் பதவி இழந்து மிலான் விடுதலை பெற்றதும் பிரஞ்சு அரசாங்கம் மாஜினியை திடீரென கைது செய்து அவருக்கு இரண்டாவது முறையாக மரண தண்டணை விதித்தது. மாஜினிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு போர்க்கொடி தூக்கி இத்தாலி முழுவதும் கிளர்ச்சி நடைபெற்றது. மாஜினியை மரண தண்டணையிலிருந்து காப்பாற்ற பொதுவுடைமைத் தத்துவ மேதை காரல் மார்க்ஸ் அறை கூவலிட்டார். அதனைக் கேட்டு சிலிர்த்துப்போன இளைஞர் கூட்டம் இத்தாலி நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாரானாது.

மாஜினியை விடுதலை செய்என்ற கோஷமே இத்தாலியெங்கும் விண்ணதிர்ந்தது. கத்தோலிக்க மதக் குருவான போப்பாண்டவர் மாஜினியை உடனே தூக்கிலிடுமாறு வற்புறுத்தினார். கடைசியில் மன்னர் மனமாறி புரட்சிகர இயக்கத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாஜினியை விடுதலை செய்தார்.

-ஜெகாதா