காம உச்சநிலையை உணர்த்தும் ‘அ’ எழுத்து

       தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் கருத்துப் பரிமாற்றத்திற்கென அதிகமாகப் பயன்படும் எழுத்து ‘அ’ ஆகும். எழுத்து வரிசையில் முதலெழுத்து ‘அ’ குறுகி ஒலிக்கும் போது ‘அகரம்’ ஆகவும் நீண்டு ஒலிக்கும்போது ‘ஆகாரம்’ ஆகவும் மாறுகிறது. ‘அ’ எனும் ஒலி பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து பரிமாற்றத்தை முழுமைப்படுத்துகிறது.

       வியப்பு, மகிழ்ச்சி, உடலுறவில் உச்சநிலை முதலிய உணர்ச்சிகளின் வெளியீடாக ‘அ’ என்ற சத்தம் வெளிப்படுவதுண்டு. பாலியலில் வெளிப்படும் இந்த ‘அ’ ஒலி உலகின் எந்த நாட்டை சார்ந்தவர்களின் ஊடலின் முடிவில் வெளிப்படும் ஒலி இதுவே.

பாலியல் அடையாள மொழிகள்

       உடல்மொழி என்பது அங்க அசைவுகள் குறியீட்டு முத்திரையை குறிக்கும் சொல். இவைகள் மனிதர்கள் உட்பட உயிரினங்களில் பலவற்றிலும் நடக்கும். இப்படிப்பட்ட அடையாள மொழிகள் காம உணர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அங்க அசைவுகள், பார்வைகள், இன்ப முணுமுணுப்புகள் இப்படி இவற்றின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

       நாக்கை மேலுதட்டில் தேய்த்து அசைத்தால் அது பாலியல் விருப்பத்திற்கான அடையாளமாக கருதப்படுகிறது. கை குலுக்கும்போது விரலினால் மற்ற நபரின் உள்ளங்கையில் சுரண்டினால் அதுவும் பாலியல் தொடர்புக்கான குறியீடு என்று கருதப்படுகிறது. ஒரு நபரின் கையில் தொடர்ந்து மூன்று முறை அழுத்தினால் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று பொருளாகுமாம்.

பெண்களுக்கு அதிக முடி வளர்ச்சி - பாலுணர்வு குறையும்

       பெண்களுக்கு இயல்பான முடி வளர்ச்சி என்பது தலையிலும், இரண்டு கைகளின் அக்குளிலும், பெண்ணுறுப்பிலும் வளர்வது தான் இயல்பானது. ஆனால் பெண்களின் மேலுதட்டிலும், தாடையிலும் வேறு சில பாகங்களிலும் உண்டாகும் முடி வளர்ச்சி இயல்புக்கு மாறானது.

       பெண் ஹார்மோன்களும், ஆண் ஹார்மோன்களும் இரு பாலினரிடமும் உண்டென்றாலும் இவற்றின் விகிதங்களில் வேறுபாடுகள் உண்டாகும்போது ஆண் ஹார்மோன்களின் செயல்பாட்டினால் பெண்களின் முகத்திலும் வேறு சில இடங்களிலும் முடி வளர்கிறது. இதற்கு மரபுக் கூறுகளும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஸ்டீராய்டு மருந்துகள், கர்ப்பத்தடை மாத்திரைகள், அட்ரீனல் சுரப்பியின் கோளாறு மூலம் உண்டாகும் சில ஹார்மோன்களின் அதிகப்படியான சுரப்பு போன்றவற்றின் காரணமாக அதிக முடி வளர்ச்சியுண்டாகிறது. அட்ரீனல் சுரப்பிக் கோளாறைச் சிகிச்சையினால் சரிச்செய்யலாம். மேலும் மேற்சொன்ன மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

       அதிக முடி வளர்ச்சியுள்ள பெண்களுக்குப் பாலுணர்வு ஆசைகள் குறையவும் வாய்ப்புண்டு.

மாவீரன், நெப்போலியனை தாக்கிய ‘பிரங்கநோய்’

       ஆயுர்வேத வைத்தியத்தில் “பிரங்கநோய்” என்பது சிபிலிஸ் தான். “டிரிப்போனமா பல்லிடம்” என்ற நோயணுக்களைப் பரவச் செய்யும் ஒரு பாலியல் நோய். பெண்ணுறுப்பு அல்லது ஆணுறுப்பின் மெல்லிய தோலினூடே இரத்தத்தில் நுழையும் நோயணுக்கள் இரத்தத்தின் வழியாகவும் லிம்ப் சிஸ்டத்தின் வழியாகவும் உடலெங்கும் பரவுகிறது. இரத்தகுழாய்களே முக்கியமாக நோயின் பாதிப்புக்கு உட்படுகின்றன. இவ்வகை பாதிப்புள்ள நோயாளியுடன் உறவு கொண்ட ஒரு சில நாட்களில் இதன் அறிகுறிகள் தெரிய வரும்.

       இந்த சிபிலிஸ் நோய் மாவீரன் நெப்போலியனுக்கு இருந்திருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்று நூல்களில் இவர் சிபிலிஸ் நோய்ப் பாதித்திருந்தது தெரியவருகிறது.

மனைவியிடம் அன்பு இல்லாவிட்டால் துரிதஸ்கலிதம் (உடனே விந்து வெளியேறல்) ஏற்படும்.

       உடலுறவில் ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழைந்த உடனே தன் கட்டுப்பாட்டை இழந்து போவதால் ஏற்படும் விந்து ஸ்கலிதம் இது. ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பும் இப்படி நிகழ்வதுண்டு. அந்நேரத்தில் முழுமையான விறைப்புத்தன்மை இருக்க வேண்டுமென்பதில்லை

மேலும் சிலருக்கு பெண்ணை முத்தமிடும் போதோ, அவளுடன் நெருக்கமாக இருக்கும் போதோ கூட ஸ்கலிதம் ஏற்பட்டுவிடுவதுண்டு.

       ஆணுறுப்பு நுழைந்த இரண்டு நிமிடங்களுக்குள் ஸ்கலிதம் உண்டாகிறது என்று பிரபல பாலியல் வல்லுநராகிய கின்செ (1953) தனது ஆய்வில் கூறியிருக்கிறார். ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு இரண்டு நிமிடத்திலும், ஏராளமானவர்களுக்கு ஒரு நிமிடத்துக்குள் ஸ்கலிதம் உண்டாகிறது. வேறு சிலருக்கோ இருபது வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை என அவரது அறிக்கை கூறுகிறது.

       இது உடலில் காரணங்களால் அல்லது உளவியல் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும், மனோவியல் பகுப்பாய்வுக் கொள்கையின்படி பெண்களோடுள்ள அன்பும், வெறுப்பும் கலந்த மனோபாவமே துரிதஸ்கலித்திற்கு காரணமென்றும் தொடர்பு கொள்ளும் ஆண், பெண்களின் உளவியல் தொடர்பினையே இது சார்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் மனைவியிடம் அதிகமான வெறுப்பில்லாத அன்பு செலுத்தியவர்கள் பாலியலில் அதிக நேரத்தை எடுத்துள்ளதும் தெரியவருகிறது.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)