சேலம் மாவட்டம் மலையடிவாரத்தில் வாழும் மக்களில் பலர் ‘முகவாத’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ‘முகவாதம்’ என்றால் என்ன? காது வழியாக ஊடுருவும் பனி, உள்ளே சென்று முகத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்தம் தடைபட்டு முகத்தின் ஒரு பகுதி மட்டும் இழுத்துக்கொள்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்ணை மூட இயலாமல் போகும். உணவு சாப்பிடும்போதோ, திரவ ஆகாரங்கள் சாப்பிடும்போதோ, அனைத்தும் வெளியே கொட்டிவிடும். சேலத்தில் மட்டுமல்ல, அதிகாலையில் பனியில் வெளியில் செல்வோரின் பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கல் மாதவிடாய் காலங்களில் உடல் பலவீனமாகும்போது முகவாதம் ஏற்படும். பனியில் பஸ்சிலோ ரயிலிலோ, பயணம் செய்யும்போது, பனிகாற்று ஊசிபோல் காதில் பனி ஊடுருவாத வகையில் ‘மப்ளர்’ கட்டிச் செல்ல வேண்டியது அவசியம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரும் காலை, மாலை நேரங்களில் தலைக்கு ‘மப்ளர்’ கட்டியபடி செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். இந்நோய் குளிர் காலத்தில் மட்டும் மனிதர்களைத் தாக்கும் சீசன் நோய். நகர்ப்புறங்களில் பனியில் வேலைக்குச் சென்று திரும்புவோரையும், கிராமங்களில் மலையடிவாரங்களில் உள்ள மக்களையும் இது தாக்குகிறது. ஆண்களைவிட பெண்களையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள சிறு குழந்தைகளுக்கு கூட முகவாதம் வரும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடையும் காலங்களில் முகவாதம் எளிதில் தாக்கும். குளிர் காலத்தில் ஆக்சிஜன் குறைவாகக் கிடைப்பதால் அதிகாலையில் முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் பெண்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு முகவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நோயை 15 நாட்களுக்குள் குணப்படுத்திவிட முடியும். உடலில் பலம் குறைவதால் அங்கத்தில் ஏற்படும் ஒரு குறைபாடு தான் இது. பயப்படத் தேவையில்லை. சிகிச்சை பெற்றால் பூரணமாக குணமடைந்துவிடலாம்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்