நெடுநேரமாய்
சூரியனின் கிரணங்கள்
சறுக்கி விளையாடிய
நிழற்குடை ஒன்று
அந்தியில் வாசம் செய்கிற
கல்லூரிப் பெண்களினால்
தணிந்திருந்தது....
நிறைந்திருந்த அப்பெண்களின்
கேளிக்கையும்
சிரிப்பொலியும்
கொட்டிய அதிர்வலைகளில்
திடீரென முளைத்திருக்கக்கூடும்
தார்ச்சாலையின் மீதொரு
வேகத்தடை...
- பாலச்சந்தர்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
- ஆ.மீ. ஜவகர்
RSS feed for comments to this post