1948, அக்டோபர் 23, 24 நாள்களில் ஈரோட்டில் நடந்த மாநாட்டு ஊர்வலத்தில், கோச்சு வண்டியில் தனது தொண்டர்களான அண்ணா, குத்தூசி குருசாமி, குஞ்சிதம் அம்மையார் ஆகியோரை அமரச்செய்து, தந்தை பெரியார் அன்னை மணியம்மையாருடன் ஊர்வலத்தில் நடந்தே வந்தார். தொண்டர்களை மதித்த, உயர்த்தி நிறுத்திய உன்னத மாண்பின் அடையாளமாய் உலக வரலாற்றில் இது உயர்ந்து நிற்கிறது. பெரியார் ஒருவரே பெரியார் என்பதற்கும், உலகத் தலைவர் பெரியார் என்பதற்கும் இது ஓர் உன்னத எடுத்துக்காட்டு.
- மஞ்சை வசந்தன்