ஒவ்வொரு ஆண்டும் உலகில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாலை விபத்தில் இறக்கின்றனர். அதேபோல் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.
விபத்தில் இறக்கக்கூடிய அல்லது பாதிக்கப்படக் கூடியவர்களில் 50% பேர் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள்.
விபத்துகள் ஒரு நாட்டை பொருளாதார ரீதியிலும் பாதிக்கிறது.
வாகனங்களில் Seat belt அணிவதன் மூலம் உயிரிழப்பை 61% வரை தடுக்கலாம்.
குழந்தைகளுடன் வாகனத்தில் செல்லும் போது அவர்களுக்கும் Child restraint அணிவதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தைகள் உயிரிப்பை 35% வரை தடுக்கலாம்.
அதேபோல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (Helmets) அணிவதன் மூலம் உயிரிழப்பை 45% வரை தடுக்கலாம்.
உலகம் முழுவதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான சட்ட விதிகளை கடுமையாக்குவதன் மூலம் உலக அளவில் 20% விபத்துக்களை குறைக்கலாம்.
நாம் குறைக்கும் ஒவ்வொரு 1Km/hr க்கும் விபத்து விகிதமானது 2% குறைகிறது. ஆகவே நாம் அனைவரும் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கினால் விபத்தில்லா சாலையை உருவாக்கலாம்
ஒவ்வொருவரும் சாலை விதிகளை தன்நலனுக்காக இல்லாவிட்டாலும் பிறர்நலனுக்காக கட்டாயமாக பின்பற்ற வேண்டும்
வாருங்கள் விபத்தில்லா சாலைகளைப் படைப்போம்!!
- ஷேக் அப்துல் காதர்