அக்டோபர் 15 உலக வெள்ளைக் குச்சி தினம், 1964லிருந்து ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. நம்மில் நிறைய பேருக்கு வெள்ளைக் குச்சி என்றாலே புரியாது, இதில் வெள்ளை குச்சி தினம் என்றால்... தலையும் புரியாது, வாலும் புரியாது. பார்வைத்திறன அற்றவர்கள், தாங்கள் நடந்தது செல்வதற்குப் பயன்படுத்தும் வெள்ளைக் குச்சியை அதன் முக்கியத்தைக் குறிப்பிடுவதற்கான தினம் இதுவாம்.

 blind_339பார்வை திறனற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைக்குச்சி முதல் உலகப் போரிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தினம் பார்வை திறனற்றவர்கள் பயன்படுத்தும் நீண்ட குச்சியின் முக்கியத்துக்காகவும், அது எப்படி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உண்டாக்கி தருகிறது என்பதையும் பார்வைஉள்ள மனிதர்களுக்கு உணர்த்தும் நாள்.அது மட்டுமல்லவெள்ளைக் குச்சி பார்வைதிறனற்றவர்களை அவர்கள் யாரையும் சார்ந்திராமல், சுதந்திர மனிதராய் மாற்றிய ஒரு பெருமை மிக்க சாதனம்.

வெள்ளைக் குச்சி என்றால் என்ன

 வெள்ளைக் குச்சி என்பது, பார்வைத் திறன் அற்ற மனிதர்களால் பயன்படுத்தப்படுவதாகும். அந்த குச்சியானது, அவர்கள் யாருடைய துணையுமின்றி நடந்து, எளிதாய் இயங்கவும், மற்றவர்களை இவர்களை யார் என்று கருத்துரைத்துக் காட்டவும் பயன்படும் அற்புத சாதனம். இப்போது நவீனப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைக் குச்சிகளும் அனைத்து முக்கியமான/அடிப்படைப் பண்புகளை பூர்த்தி செயவதாக இல்லை. ஆனால் முக்கியமாக இந்த சாதனத்தில் குறைந்த பட்சம் 5 வகைக் குச்சிகள் உண்டு. ஒன்றுக்கும் அடுத்ததிற்கும் மெலிதான வேறுபாடு உண்டு. இவை செயலாற்றும் விதத்தில் ஒவ்வொன்றும் அந்த தேவைகளை ஆற்றும்படி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பார்வைத் திறன் அற்றோர் பயன்படுத்தும் குச்சி அடிப்பகுதியில் சிவப்பு பட்டையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

 வெள்ளைக் குச்சி கண்ணாடி இழைகளால்/கார்பன் இழை/உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த குச்சியை ஒரு கரத்தால் கையாள முடியும். இந்த குச்சியை பார்வைத் திறனற்றவர் கையை வீசி ஆட்டி நடக்கும்போது அந்த வெள்ளைக் குச்சியானது தனி ஊசல் போல் இருபக்கமும் அலைபாயும். இதன் மூலம், அந்த சகோதரர், சாலையில் எளிதாக யாருடைய உதவியும் இன்றி நடக்க முடிகிறது. அவர்களின் தடத்தை அறிய, அதில் உள்ள பொருள்களை அறிய, மேடு பள்ளம் கண்டறிய, மாடிப் படிகள் மற்றும் கதவுகளையெல்லாம் அந்த குச்சி ஆருயிர் நண்பனாய் அவர்களுக்கு வழி காட்டுகிறது.

குச்சியின் பிறப்பு..!

 இதனைக் உருவாக்கியவர் ரிச்சர்டு ஹோவர் (Dr Richard Hoover) என்பவர்தான். இதனால் பாரம்பரியமாக இது ஹோவரின் குச்சி என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இது பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 ஜேம்ஸ் பிக்ஸ் என்ற நிழற்படக்காரர் 1921ல் , ஒரு விபத்துக்குப் பின் பார்வை இழந்துவிட்டார். அதன் பின் அவருக்கு கூட்டத்தில் நடப்பதும், வீட்டைச் சுற்றி வருவதும் மிகுந்த சிரமமாகிறது. அதனால் அவர் பயன்படுத்திய நடை குச்சிக்கு வண்ணம் தீட்டி வைத்திருந்தார் எளிதில் அடையாளம் கொள்ளும்ப்படியில்..!

உலகம் முழுவதும்.. வெள்ளைக் குச்சி..!

 பிரான்சில் 1932ல் குல்லி ஹேர்பேமொன்ட் (France, Guilly d'Herbemont )தேசிய வெள்ளைக் குச்சி இயக்கம் என்ற ஒன்றினைத் துவங்கி, பார்வைத் திறனற்ற மக்களுக்கெல்லாம் வெள்ளைக் குச்சி அளித்தார். பின்னர் 1931 பிப்ரவரி 7ல் இவரே, பிரான்சு அரசின் அமைச்சர்கள் முன்னிலையில் இரண்டு வெள்ளைக் குச்சிகளை பார்வைத் திறனற்ற மனிதர்களுக்குக் கொடுத்தார். அதன் பின், முதல் உலகப் போரில் பார்வையைப் பறிகொடுத்தவர்களுக்கும், பார்வை திறனற்ற குடிமக்களுக்கும் என 5000, வெள்ளைக் குச்சிகள் வழங்கினார். பிறகு அமெரிக்கர்களும் அரிமா சங்கத்தின் மூலம் இதனை ஒரு இயக்கமாக செய்தனர். அதற்குப் பின்தான் 1964ல் இதனை உலக வெள்ளைக் குச்சி தினமாக‌ அக்டோபர் 15 ம் நாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ஐரோப்பாவில் இந்த குச்சியே அடியில் இரண்டு சிவப்பு பட்டை இருந்தால் அது கேட்கும் திறனற்றவர்களையும் இணைத்துக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.

பார்வைத்திறனற்றோர்.. வாக்களிக்க.. வாக்குச்சீட்டு..
 
 இப்போது 2008 லிருந்து மோனிக் டெ வில்ட் ( Monique de Wilt,) உருவாக்கிய GPS உள்ள global navigation satellite system உள்ள வெள்ளைக் குச்சிகள் பார்வைத்திறனற்றவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பார்வைத்திறனற்றோர்களை மதித்து முதன் முறையாக அவர்களுக்கும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 2011 அக்டோபர் 18ம் நாள் கோவாவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பார்வைத் திறனற்றவர்களுக்கு பிரைலி வாக்குசீட்டுகள், வாக்களிக்கும் இடத்தில் வழங்கப்பட்டன என்ப‌து பெருமையும், மகிழ்வையும், நெகிழ்வையும் அளிக்கும் செய்தியாகும்..!

-பேரா.சோ.மோகனா