தேவையான பொருட்கள்:

கொத்திய கறி - 100 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி
தேங்காய் - இரண்டு பத்தை
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 துண்டு
காய்ந்த மிளகாய் - 2
கொத்துமல்லிக் கீரை - கால் கட்டு
கடலை பருப்பு - கால் கப்
மைதா - ஒரு தேக்கரண்டி
கார்ன்பிளர் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிப்பதகுத் தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு வேக வைத்து தண்ணிரை வற்ற விட வேண்டும். அதில் ஆலிவ் ஆயில், வெங்காயம் போட்டு நன்கு பிறட்டி எடுத்து, கொத்து மல்லியும், தேங்காயை துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆற வைக்க வேண்டும்.

மிக்சியில் முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையைப் போட்டு நல்ல அரைக்க் வேண்டும். பின்பு ஒரு தவ்வாவில் வேண்டிய வடிவில் தட்டி பொரித்தெடுக்க வேண்டும்.