தேவையான பொருட்கள்:

நண்டு - அரை கிலோ
மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - ஒரு கப்
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்க வேண்டும். அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிட வேண்டும்.

நீரின் அளவு, நண்டு துண்டங்கள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், பூண்டு இவையனைத்தையும் கொதிக்கும் குழம்பில் போட வேண்டும். ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி வைத்து வேகவிட வேண்டும்.

சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பினைக் கெட்டியாக்க அதில் சோளமாவினைச் சேர்க்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்க வேண்டும். சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்

 

Pin It