வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?
வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல் எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்
நீநம்பாய் என்று, நிமிர்ந்த என்கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்;
உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே இருப்பாய் பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண்டே இருப்பார் தென்பாங்கை உன்பால்!
அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.
பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
எழுத்தாளர்:
பா.ஜ.க மிகவும் பலம் வாய்ந்த கட்சியென மோடி பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட்டணி கட்சிகளே பா.ஜ.க.வின் வெற்றிக்கு உண்மையில் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் போல் பலமிக்க கூட்டணியை தற்போது பா.ஜ.கவால் உருவாக்க…
மேலும்...