நாம் இங்கு எடுத்துப் பேச வேண்டியது திராவிடர் கழகத்தின் கொள்கையாகும். நமக்கு இருக்கும்ஜா தி இழிவு ஒழிய வேண்டும்; காட்டு மிராண்டித் தனம் ஒழிய வேண்டும் என்பதேயாகும். இந்தச்ஜாதி இழிவு ஒழிக்க வேண்டிய கவலை வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. இந்த நாட்டில் ஆளும் கட்சி காங்கிரஸ். அதற்கு இந்தச் ஜாதி இருக்கவேண்டும் என்பதுதான் கொள்கை. ஆளுங் கட்சிக்கே இப்படி என்றால், மற்ற கண்ணீர்த் துளி, சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு கட்சி எல்லாவற் றிற்கும் ஜாதி ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து இருக்கப் போகின்றது? ஒரு கட்சிக்காரனும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறவே மாட்டான், காங்கிரஸ் பார்ப்பனரின் அனு கூலத்துக்காக உள்ளது. மற்றக் கட்சிக்காரன்கள் அத்தனை பேர்களும் தேவடியாள் மகன் என்கின்ற இழிபிறவிகளின் லிஸ்டில் உள்ளவர்கள்தான். கண்ணீர்த் துளியில் எல்லோருமே அந்த லிஸ்டில் உள்ளவர்கள் தான். மற்றக்கட்சிகளும் அப்படியே. ஏதோ ராஜாஜியின் சுதந்தராக் கட்சியில் மட்டும் சரி பகுதி பார்ப்பன ஆட்கள் இருப்பார்கள்.

periyar kamarajar 258காங்கிரஸ் நம்மை ஆளும் கட்சியாக, பார்ப்பான் பாதுகாவலுக்காக உள்ளதாக இருந்தாலும், முதன்மந்திரியாக இருந்து ஆளுபவர் காமராசர் அவர்கள் - இந்த ஜாதி இழிவு ஒழியவும் நமக்குக் கல்வி யிலும் உத்தியோகத்திலும் இருந்துவரும் குறைபாடுகளை ஒழிக்கப் பாடுபட்டு வருகின்றார்.

காங்கிரசில் ஜாதி ஒழிய வேண்டும் என்று திட்டம் இல்லாவிட்டாலும், காமராசர் அவர்களது முயற்சியால், ஏதோ ஒருவாறு ஜாதி ஒழிந்தே தீரும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை ஜாதி ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிந்தால்தான் முடியும் என்பதாகும். இஸ்லாம் மதம் என்றால் ஜாதி வித்தியாசம் கிடையாது. கிறிஸ்தவம் மதம் என்றால் அவர்களுக்கும் ஜாதி இல்லை. ஏதோ இந்த நாட்டில்தான் இந்நாட்டுக்கு தக்கவாறு பாதிரிகளின் போக்கினால் இங்கு பறை கிறிஸ்தவன், பார்ப்பார கிறிஸ்தவன் இருக்கின்றான். வெள்ளைக் காரனில் ஜாதியில்லை. பறை வெள்ளைக்காரன், பாப்பார வெள்ளைக் காரன் கிடையாது, முஸ்லிமிலும் பறை முஸ்லிம், பார்ப்பார முஸ்லிம் கிடையாது.

அதுபோலவே, நாமும் ஏன் ஜாதி யொழிந்த சமுதாயமாகக் கூடாது? ஏன் இழிஜாதியாக இருக்கின்றோம் என்றால், நம் கடவுள் காரணமாகத்தான். முஸ்லிம்களின் கடவுளின் பேரால் ஜாதி கிடையாது. கிறிஸ்த வனிலும் கடவுளின் பேரால் ஜாதி கிடை யாது. நமக்குத்தான் மத அடிப்படையில் ஜாதி இருக்கின்றது.

நமது கடவுளும் மதமும் ஒழியாத வரை ஜாதி ஒழியாது. முஸ்லிமுக்குச் ஜாதி இல்லை என்றால் கடவுள்களை எல்லாம் உடைத்தவர்கள் ஆவர்.

நாம் ஏன் இழிபிறவியாக, கக்கூஸ் எடுப்பவர்களாக, சிரைப்பவர்களாக, வெளுப்பவர்களாக இருக்கின்றோம் என்றால் எதன் காரணமாக! ஜாதியின் காரணமாகத்தானே?

நமக்கு மானம் வெட்கம் இருக்குமானால், நம்மை இழி பிறவியாக வைத்து இருக்கும், நாம் தொட்டால் செத்துப் போகும் என்று கூறும் சாமியைக் கும்பிடுவார்களா?

நாம் தொட்டால் செத்துவிடும் என்று கூறுகின்ற கோவிலுக்குச் சென்று ஏன் மானம் கெடுகின்றாய்? என்றுதான் கேட்கின்றோம்.

கோயிலுக்குப் போகாததினாலேயோ, கல்லைக் கும்பிடாத தினாலேயோ, நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆகிவிட மாட்டீர்கள். கோயிலில் என்ன இருக்கின்றது? குழவிக் கல்லுதானே இருக்கின்றது? அங்கு என்ன வாழுகின்றது? படுத்துக் கிடக்கும் குழவிக்கல்லை நிமிர்த்தி வைத்தால் அதுதான் சாமியா?

இப்படியே நாம் கோயிலுக்குப் போய்க் கொண்டும், கல்லைக் கும்பிட்டுக் கொண்டும் இருந்தால், நாம் எப்போது ஜாதி இழிவு ஒழிந்தவர்களாக ஆவது?

பரம்பரை இழிவு நீங்குவதெப்போ?

பறையன் சக்கிலி இன்று நேற்றா இருக்கின்றான்? ராமாயணம் பாரதம் மற்ற மற்ற புராணங்களில் எல்லாம் உள்ளது. இந்த இழிவு நீங்க வேண்டாமா? எனவே மாரி யாத்தாள் முதற்கொண்டு எந்தக் கடவு ளையும் கும்பிடக்கூடாது. கடவுள் எல்லாம் ஜாதிக்காக செய்துவைக்கப்பட்டதாகும்.

பேருக்குத்தான் மனிதன் சாமி சாமி என்று கட்டிக்கொண்டு அழுகின்றானே ஒழிய, ஒருவன்கூட உண்மையில் சாமியை நம்புவது இல்லை - ராத்திரியில் எல்லாரும் வீட்டுக்குத் தாழ்போடுகின்றான் - ஏன் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று போடாமல் இருப்பதில்லை.

இரண்டு ரூபாய் பணம் இருந்தாலும் பெட்டியில் வைத்து, இரண்டு தடவை பூட்டை இழுத்து இழுத்துப் பார்ப்பானே ஒழிய, கடவுளே பார்த்துக் கொள்வார் என்று இருப்பதில்லை.

பண்டார சன்னதி சங்கராச்சாரி முதல் எவரும் சாமிக்கும் பயப்படுவதில்லை. கொட்டை கட்டிக்கொண்டு பட்டை போட் டுக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம், உள்ளே அயோக்கியர்களாகவே இருப் பார்களே ஒழிய, ஒழுக்கத்தைப் பார்க் கவே முடியாது.

நடுவில் திருடன் பூட்டை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்து சாமியின் பெண்டாட்டியினுடைய நகைகளையும் புடவையையும் அவிழ்த்துக்கொண்டு அம்மன் சாமியையும் குப்புறத்தள்ளி விட்டு போகின்றவனை, இந்தச் சாமி என்ன செய்கின்றது? தன்மனைவியின் சேலையை இழுத்து அவிழ்ப்பவனை நிறுத்தி தன் மனைவியின் மானத்தைக் காக்காத கடவுளா உனக்கு உதவப் போகின்றது?

அதுபோலவே நம் மதமும் ஒழிய வேண்டும்; நமக்கு என்ன மதம் அழு கின்றது? சாம்பல் அடித்துக் கொள்வதும், செம்மண் பட்டையும் சுண்ணாம்புப் பட்டையும் அடித்துக் கொள்ளுவதைவிட வேறு என்ன உள்ளது? என்று எடுத்துரைத்தார்கள். மேலும் பேசுகையில் நமது காட்டுமிராண்டித்தனமும் ஜாதி இழிவும் நீங்க நாம் கைக்கொள்ள வேண்டிய காரியங்கள் பற்றியும் முதலமைச்சர் காமராசர் ஆட்சி இன்னும் 10 ஆண்டாவது நிலைத்து இருக்க வேண்டியது பற்றியும், அவர் கல்வி, உத்தியோகம் முதலியவற்றால் நமக்கு ஆற்றி வரும் நன்மைகள் பற்றியும் விளக்கிப் பேசினார்கள்.

------------------------------

திருச்சியில் 13.11.1960 இல் தந்தை பெரியார் ஆற்றிய உரை - 'விடுதலை', 18.11.1960
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It