உலக வங்கி பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளும், உலகமயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய மூன்று முழக்கங்களும் இந்தியாவைச் சுரண்டும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

 அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள வளரும் நாடுகளில் தங்கள் வணிகத்தையும், மூலதனத்தையும் செலவிட்டுப் பெருவாரியாக இலாபம் ஈட்ட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

 ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான சபை 1992 ஆம் ஆண்டு சுற்றுச் சூழலுக்காக உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து நடத்திய உச்சி மாநாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகத்தைச் சுற்றுச் சூழல் சீரழிவிலிருந்து பாதுகாக்க இதுவே கடைசி வாய்ப்பு என்று உலக நாடுகள் ஆவலுடன், எதிர்பார்ப்புகளுடன் கலந்து கொண்டன. அந்த புவி உச்சி மாநாட்டில் மூன்று முக்கியமான சிக்கல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

 புவி வெப்ப உயர்வுக்கு மூல காரணமாக இருப்பது காற்றின் மாசுபாடு ஆகம். குறிப்பாகக் கார்பன்-டை-ஆக்சைடு காற்று மண்டலத்தில் அதிகமாவதற்குத் தொழிற்சாலைகளும், வாகனங்கள் வெளியிடும் புகையும் முக்கிய காரணம். பணக்கார நாடுகள் காற்றின் மாசுபாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மேலை நாடுகள் அதிலும் அமெரிக்கா தனது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று புவி உச்சி மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அப்போதைய அமெரிக்கா ஜனாதிபதி பேசும்போது, அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் எரிபொருள்களைக் குறைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆணவமாக பதிலளித்தார்.

 பல்லுயிர் பெருக்கம் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மிகப் பெரும் சொத்தாகும். உயிரினத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாணிபம் செய்யும் பல பன்னாட்டுக் கம்பெனிகளும், இந்தப் பகுதியில் உள்ள உயிரினங்கள், தாவர வகைகள் மீது தங்கள் கவனத்தைச் செலுத்தியுள்ளன.

 உயிரித் தொழில் நுட்பத்துக்காக ஒரு நாட்டில் இருந்து உயிரின மாதிரியை இந்தக் கம்பெனிகள் பயன்படுத்தினால் அதன் வருமானம் அந்த நாட்டுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகள் இந்த முடிவுல் கையெழுத்து போட மறுத்துவிட்டன.

 பசுமையான ஒரு உலகத்தைப் படைத்திட உலக நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டத்தை அஜெண்டா 21 எடுத்துரைக்கிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டன. ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் தங்கள் நாட்டின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பணக்கார நாடுகள் நிதியுதவி செய்ய வேண்டுமென புவி உச்சி மாநாட்டில் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் திட்டத்திற்கான நிதியுதவி, தொழில் நுட்ப உதவி போன்றவைகளை மேலை நாடுகள் இன்றுவரை செய்யவில்லை.

 மேலும் புவி உச்சி மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சம் உலகின் இயற்கை வளங்களைப் பங்கிடுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் சமத்துவ நிலை வேண்டும் என்பதாகும். உலகின் 80 விழுக்காடு இயற்கை வளங்களை மேலை நாடுகளே அனுபவித்து வருகின்றன. இயற்கை வளங்களை அனுபவிக்க அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். ஆனால் சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார வளாச்சி என்பதும், தொழில் வளர்ச்சி என்பதும், இயற்கைச் சூழலைப் பாதிக்காத வகையிலும், நிலைத்த நீடித்த வளர்ச்சிக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் உலக மயமாக்கலைத் தீவிரப்படுத்த நிர்பந்திக்கும் வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை எதிர்மறையாகச் செயல்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

 கார்பன் - டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள் ஆகிய வாயுக்கள் (இவை பசுமைக் குடில் வாயுக்கள் என்று அழைக்கப்படுவையாகும்) காற்று மண்டலத்தில் அதிகமாகும்போது காற்று மண்டலத்தின் வெப்பம் உயர்வடைகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிப் பொருட்களை எரிப்பதானது மனிதர்களின் வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை 2100 ஆம் ஆண்டில் 1.47 டிகிரி சென்டிகிரேட் உயரும். இந்த உயர்வால் பங்களாதேஷ், சீனா, எகிப்து போன்ற நாடுகளின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகுந்தது நிலப் பரப்பை அழிக்கும். மாலி போன்ற பல சிறு தீவுகளும், கடல் நீருக்குள் மூழ்கிவிடும் அபாயமும் உண்டு காற்று மண்டலத்தில் வெப்பம் உயர்வதைத் தடுக்க வளர்ந்த மேலை நாடுகள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளிப்படுத்தும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 1997 இல் ஜப்பான் நகரான கியோடோவில் மேற்கொண்டு நடத்திய விவாதங்களிலும், பேச்சுவார்த்தைகளிலும் 2008-2012க்குள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடுவதை மேலை நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கியோடோ உடன்படிக்கை இன்னும் அமலுக்கு வரவில்லை.

 வளர்ச்சியடைவதற்கும், இயற்கை வளங்களை அனுபவிப்பதற்கும் எல்லா மனிதர்களுக்கும் உள்ள சமத்துவ உரிமையை அடிப்படையாகக் கொண்டு வளரும் நாடுகள் வலியுறுத்தி வரும் இந்த உடன்படிக்கை நடைமுறையில் கேள்விக் குறியாக உள்ளது.

 உயிரினத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல பெரிய கம்பெணிகள் (மான்சான்டோ, கார்கில்) அமெரிக்காவில் உள்ளன. கீழை நாடுகள் தங்களின் உயிரின வகைகளைத் தங்கள் நாடுளில் பாதுகாத்து வந்தால், இதைப் பயன்படுத்தி வரும் தாவர வகைகள், உயிரியல் வகைகளின் மேல் அந்த நாடுகளுக்கு உள்ள உரிமையைக் கேள்விக் குறியாக்கி வருகின்றன.

 ஓசோன் படலம் பாதிப்படைவது பற்றி உலகத்தில் பார்வை 1970-இல்தான் திரும்பியது. 1988 ஆம் ஆண்டில் 2600 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவுக்கு வாயு மண்டலத்தின் மேற்பரப்பில் ஓசோன் பரப்பு மெலிவடைந்துள்ளது. பில் ஒசோன் பரப்பு மெலிவடைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது பூமியின் வடக்குப் பகுதியிலேயேதான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வகையான இரசாயனங்கள் காற்று மண்டலத்தில் பரவி மேற்பரப்பை அடையும்போது ஓசோன் வாயுவை கரைத்துவிடும். துன்மைக் கொண்டுள்ளது. குளோரோ, புளோரோ கார்பன்கள் (ஊகுஊ) என்று அழைக்கப்படும் இந்த வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், அதற்கான செயல் திட்டத்தையும் 1987 இல் கையொப்பமிட்ட மான்ட்ரீஸ் உடன்படிக்கை வலியுறுத்துகிறது. ஆனால் டுபான்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் குளோரோ புளோரோ கார்பன்கள் என்ற வாயுக்களைத் தங்கள் உற்பத்தியில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் ஓசோன் படலத்தின் ஓட்டை அதிகரிக்கும்.

அபாயகரமான கழிவுகள்

 மேலை நாடுகள் அபாயகரமான கழிவுகளை வளரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் விலைக்கு விற்றுவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த 1992 ஆம் ஆண்டில் பேசல் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது. இதில் 148 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இதன்படி அபாயகரமான கழிவுகளை ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியை நியாயப்படுத்துவதாக உள்ளது எனச் சுற்றுச் சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன்பேரில் அபாயகரமான சில கழிவுகளை ஏற்றுமதி செய்வதை அறவே தடுக்கக்கூடிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திருத்தத்தை இதுவரை 26 நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.

 உலகமயமாக்கலின் மிக அபாயகரமான அம்சம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல்வேறு தொழிலகங்களை இந்தியா போன்ற ஏழை நாடுகளில் அமைப்பதாகும்.

 கடந்த பத்தாண்டுகளில் உலகின் பல இடங்களில் போர் ஏற்பட்டுள்ளது. ஈராக் மீது அமெரிக்காவினர் நடத்தி வரும் போர், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆகியவற்றால் நீரும், நிலமும் மாசடைந்துள்ளன. இரசாயன மருந்துகளாலும், பெட்ரோலியப் பொருட்களாலும் மக்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகின் வல்லரசு நாடுகளால் நடத்தப்படும் போர்களினால் சுற்றுச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகின் வல்லரசு நாடுகளால் நடத்தப்படும் போர்களினால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.

 உலகம் முழுவதும் மக்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அரசுகள் உலக வங்கியிடமும், அமெரிக்காவிடமும் மண்டியிட்டுக் கிடக்கின்றன. சுற்றுச் சூழலில் அக்கரை கொண்ட விஞ்ஞானிகள், அறிஞர்கள், கட்சிகள், மக்கள் இயக்கங்கள் பங்கு மிக முக்கியமானது. மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரச்சாரம் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராட வேண்டியது சமூகக் கடமையாகும்.