எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

1.     பாதுகாப்பற்ற உடலுறவில் எச்.ஐ.வி உள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.

2.     ப‌ரிசோதிக்கப்படாத இரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.

3.     சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் பரவலாம்.

4.     எச்.ஐ.வி. உள்ள கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரவலாம்.

எப்படி தடுக்கலாம்?

1.     ப‌ரிசோதிக்கப்பட்ட இரத்தத்தையே பயன்படுத்துதல்.

2.     சுத்திகரிக்கப்பட்ட அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தகூடிய ஊசிகளை பயன்படுத்துதல்

3.     பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுரையை பயன்படுத்துதல்.

உலகம் முழுவதும் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் நோயின் தாக்கம் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எச்.ஐ.வி. ,எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகம் இருக்கிறது இதற்கு என்ன காரணம்?

       உலக சுகாதார நிறுவனம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான பல காரணங்களை கூறியுள்ளது. 1) சந்தை பொருளாதாரம், 2) கல்வியறிவின்மை, 3) ஆண், பெண் பாலின வேறுபாடு (ஆணாதிக்கம்), 4) ஊடகங்களின் தாக்கம், 5) வறுமை, 6) அடிப்படை மதவாத பிற்போக்கு தனங்கள் ஆகியவையாகும்.

       மேற்கண்ட காரணங்களை வைத்து எச்.ஐ.வி. நோய் தடுப்பு திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். ஆனால் இந்தியாவில் எச்.ஐ.வி. நோய் தடுப்பு திட்டங்கள் முறையாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை தற்போது இந்தியாவில் செயல்படுத்தப்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் ஏகாதிபத்திய உலகமய கொள்கைகளுக்கு சேவை செய்வததை நோக்கமாக கொண்டுள்ளது. எய்ட்ஸ் தடுப்பு சட்டங்களில் அரசு-தனியார் பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது. பெரும்பாலும் நோய் தடுப்பு திட்டங்கள் தொண்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்படுகின்றன.

 ஐந்து நட்சத்திர கேளிக்கை விடுதிகள் என்ற பெயரில் மறைமுகமாக பாலியல் தொழில் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு வரிவிலக்கு வேறு அளிக்கப்படுவது வெட்கக்கேடு*

மருத்துவத் துறையில் ஆங்கில மருத்துவ (அலோபதி) ஆதிக்கம்

       தமிழகத்தில் மொத்தமுள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 391 நிலையங்களில்தான் சித்தா பிரிவு உள்ளது. துணை சுகாதார நிலையங்கள் 8683 -ல் ஒன்றில் கூட சித்தா பிரிவு கிடையாது. ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்றும் அதில் 5000-1, பேருக்கு ஒரு ஆங்கில மருத்துவர் என்றும் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு லட்சம் பேருக்கு ஒரு சித்த மருத்துவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படுகின்றனர். மருத்துவக் கல்லூரிகளும் வட ஆங்கில மருத்துவ கல்லூரி 17 என்றால் சித்த மருத்துவக் கல்லூரி இரண்டே இரண்டு தான். அதையும் தற்போது தனியாரிடம் தாரைவார்த்து விடத் தொடக்கிவிட்டனர்.

 தமிழகத்தில் சித்த மருத்துவம் புறக்கணிக்கப்படுவது போலதே தான் இந்தியா முழுவதும் நமது நாட்டின் பாரம்ப‌ரிய மருத்துவங்களான ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலும் கூட பொதுநலத் திட்டத்திற்கு ரூ.274,0- கோடி ஒதுக்கியுள்ளனர். அதில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற உள்நாட்டு மருத்துவத்திற்கு ஒதுக்கியது வெறும் 86 கோடி ரூபாய்தான். இவ்வாறு உள்நாட்டு தேசிய மருத்துவம் புறக்கணிக்கப்பட்டு அந்நிய ஆங்கில மருத்துவம் (அலோபதி) ஆதிக்கம் புரிவதற்கான காரணம் என்ன?

அரசியல் பொருளாதாரத்துறைகளில் அந்நிய ஆதிக்கம்

       1947-ல் ஆட்சி அதிகாரம் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் கைகளில் மாற்றப்பட்ட பிறகு பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் தூக்கியெறியப்படாததோடு அமெரிக்கா போன்ற பல்வேறு ஏகாதிபத்தியங்களின் மறைமுக ஆதிக்கத்திற்காக போட்டிக்களமாக இந்தியா மாற்றியமைக்கப்பட்டது. அதாவது காலனிய இந்திய அரைக்காலனியாக மாற்றப்பட்டது. தொழில் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதுபோலவே மருத்துவத்துறையிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சியாக ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உள்நாட்டு (தேசிய) மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவை புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

       90 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு அதுவரை கடைப்பிடித்துவந்த கலப்புத் பொருளாதாரக் கொள்கை சேம நல அரசுக் கோட்பாடு ஆகியவற்றைக் கைவிட்டு (சோசலிச வேடத்தைக் கலைத்துவிட்டு) உலகமயம், தனியார்மயம், தாரளாமயக் கொள்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டது. காரணம் உலகளவில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியும் தனது தலைமையில் ஒரு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், இந்தியாவைத் தனது புதிய காலனியாக மாற்றியமைப்பதற்காக உலகவங்கி, சர்வேதச செலவாணிநிதியும் போன்ற தன் கைப்பாவை அமைப்புகள் மூலமாக உலகமயக் கொள்கைகளை அமல்படுத்த நிர்ப்பந்தித்தது. அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணிந்தே பழக்கப்பட்ட ஆளும்வர்க்கங்களும் இந்திய அரசும், உலகமயக் கொள்கைகளையும் கட்டமைப்புச் சீர்த்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொட§கியது.

       இதன்படி அரசாங்கமானது உற்பத்தி வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும். பொதுத்துறையில் உள்ள தொழில் நிறுவனங்கள், நிதித்துறை, வங்கி, ஆயுள்காப்பீடு போன்ற துறைகளை தனியாரிடம் (அந்நியரிடம்) ஒப்படைத்து விடவேண்டும். மேலும் அரசு தனது நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்காக கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதைத் கைவிட்டு அவற்றை தனியாரிடம் தாரை வார்த்துவிட வேண்டும். அதாவது இத்துறைகளை உள்நாட்டுப் பெருமுதலாளிகளிடமும் பன்னாட்டு முதலாளிகளிடமும் ஒப்படைத்துவிடவேண்டும்.

       மேற்கூறிய கொள்கைகளைத்தான் 91 ஆம் ஆண்டுகளிலிருந்து இந்திய அரசு தொய்வின்றி தொடர்ந்து அமல்படுத்திவருகிறது. இதன் விளைவாகவே அனைத்து துறைகளிலும் தனியார்மயம் வணிகமயம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றது. தொழில்,வர்த்தகம் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம் சுகாதாரம் போன்ற எல்லாத் துறைகளிலும் தனியார்மயம் வணிகமயம் கொடிகட்டிப் பறக்கிறது. அதாவது தனியார்மயம் என்ற பெயரில் அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் கோலோச்சுகிறது. இதன் விளைவே அந்நிய ஆங்கில மருத்துவம் (அலோபதி) ஆதிக்கம் செலுத்துவதும், தேசிய, பாரம்ப‌ரிய மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவை நசுக்கப்படுவதுமாகும். இந்தப் பொதுப் போக்கின்ட ஒரு பகுதியே பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரி தனியார் மயமாக்கப்படுவதும் வணிகமயமாக்கப்படுவதுமாகும்.

மருத்துவத் துறையில் தனியார்மயம் வணிகமயம்

       மருத்துவத்துறையில் மருத்துவமனைகள் அமைப்பது, மருந்து உற்பத்தியில் ஈடுபடுவதும், மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதும் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஏகாதிபத்தியங்களின் ஆணைகளுக்கிணங்க இந்திய அரச பன்னாட்டு உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு திறந்துவிட்டு வருகிறது. காச நோய், தொழுநோய், குடும்பக்கட்டுப்பாடு ஆகியவற்றை தவிர்த்து மற்ற அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. மேற்கூறியவை கூட தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

       மருத்துவத் துறையில் அந்நியக் கம்பெனிகள் தலையிடுவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பு 51 சதவீத்திலிருந்து 2000 த்தில் 71 சதவீதமாகவும், 2002-ல் 100 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு முதலீட்டுக்கான வரம்புகள் முமுமையாக நீக்கப்பட்டுவிட்டன. கடந்த 2002-ல் பாஜக ஆட்சியின்போது “தேசிய நலக் கொள்கை” என்ற பேரிலும் தற்போதைய மன்மோகன் கும்பலின் ஆட்சியில் “அரசு தனியார் பங்கேற்பு” எனும் பேரிலும் மருத்துவத்துறையில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

தனியார் மற்றும் பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவமனைகள் அமைப்பதற்கு, நகர்ப்புறங்களின் பிரதானப் பகுதியில் மிகக் குறைந்த விலையில் அரசாங்கம் நிலம் வழங்குகிறது. (ஒரு ஏக்கர் ஒரு ரூபாய்க்கு) பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகள் உயர்தொழில்நுட்பக் கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் கான்ட்ராக்ட் முறைகள் மூலமும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பேரிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளிலும்கூட உபயோகிப்பாளர் கட்டணம் எனும் பேரில் அரசாங்க கஜானாவை நிரப்புவதற்கு மக்களின் கோவணத்தையும் பிடுங்குகின்றனர். இன்று மருத்துவத்துறை 85 சதவீதம் தனியார் மயம் ஆக்கப்பட்டிருப்பது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான். இவ்வாறு மருத்துவத்துறை தனியார் மயம், வணிக மயமாக்கப்படுவது ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவியின்றி நோயினால் மடிவதற்கும், மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்திற்கும், உள்நாட்டு மருத்துவம் அழிவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. 

       மருந்து உற்பத்தியில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இருந்த தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை நீக்கியது மட்டுமல்லாது, உலக வர்த்தக சபையின் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. அரசின் அனுமதியின்றியே பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் தொழில் தொடங்க முடியும். 1970 ஆம் ஆண்டின் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்படி மருந்து உற்பத்தி செய்முறைகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்பட்டுவருகிறது. மேலும் மருந்து விலைக்கட்டுப்பாட்டு ஆணையத்தையும் முழுமையாக மூடிவிட்டது. எனவே மருந்து உற்பத்திலும் ஆராய்ச்சியிலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தைக் கொண்டு வருகின்றன.

       இன்று உலகளவில் மருந்து உற்பத்தியில் அமெரிக்கா,ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் 80 சதவீதத்திற்குமேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவைகளின் ஆராய்ச்சி மேற்கத்திய நாடுகளை மையமாகக் கொண்டே உள்ளன. மூன்றாம் உலக நாடுகள் மீது அவர்களின் மருந்துகள் திணிக்கப்படுகின்றன. உள்நாட்டு மருந்துக் கம்பெனிகள் பன்னாட்டுக் கம்பெனிகளால் விழங்கப்படுகின்றன. உயிர்காக்கும் மருந்துகளின் விலை பன்மடங்கு உயர்த்திவிற்கப்பட்டு பல்லாயிரம்கோடி ரூபாய்களை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. மருந்து ஏகபோகத்தின் மூலம் மருத்துவத்துறை முழுவதையும் நமது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிடுகின்றன. எனவே ஏழை எளிய மக்களின் உயர்வாழும் உரிமை பறிக்கப்படுவதுடன் உள்நாட்டு ஆங்கில மருத்துவத்தையும் கட்டுப்படுத்தி, பாரம்ப‌ரிய மருத்துவமும் புறக்கணிக்கப்பட்டு படிப்படியாக அழிக்கப்படும்.

       உயர்கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, கல்வியை சர்வதேசத்தரத்திற்கு உயர்த்துகிறோம் எனும் பேரில் பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களுக்குத் திறந்துவிடுகிறது. மருத்துவக் கல்வி உள்ளிட்டு அனைத்து உயர் கல்வியிலும் பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் கடைபரப்புகின்றன. இன்று அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் செயல்படும் 169 கல்வி நிறுவனங்களில் 104 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகும். இவைகள் அரசாங்கத்தின் சட்ட விதிகளை மதிப்பதே கிடையாது. கல்விக் கட்டணங்களை உயர்த்துவதும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களைச் சேர்ப்பது, ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம், மாணவர்களிடம் அதிகக் கட்டணம் என மாணவர்களை[யம் பெற்றோர்களையும் கொள்ளையடிக்கின்றன. இதுபோன்ற கல்வி நிறுவனங்களின் நோக்கம் கல்விச்சேவை வழங்குவது அல்ல. மாறாக பட்டங்களை விற்கும் கல்விக்கடை நடத்துவதே*

       இவ்வாறு உயர் கல்வியில் குறிப்பாக மருத்துவக்கல்வியில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது நாட்டின் சுதந்திரமான ஆராய்ச்சிக் கல்வியை அழித்துவிடும். ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் அடிமைத்தனத்தைக் கற்றுக் கொடுக்கும். சுயத்தை இழந்து காயடித்த காளைகளாக மாணவர்கள் மாற்றப்படுவர். மருத்துவத் துறையில் சித்தா உள்ளிட்ட உள்நாட்டு மருத்துவம் படிப்படியாக பன்னாட்டு கம்பெனிகளால் அழிக்கப்படும்.

நாடாளுமன்றவாத கட்சிகளின் நயவஞ்சகம்

மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பலின் ஆட்சி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதும், அரசாங்க நிதித் துறைகள் உற்பத்தி துறைகள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஏலம் போட்டு தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா பேசும்பொழுது “அரசுடைமையாக்கும் காலம் மலையேறிவிட்டது. இது தாராளயுகம். இக்காலக்கட்டத்தில் பின்நோக்கு செல்ல முடியாது” என்று கூறி மன்மோகன் கும்பலின் கயமைத்தனத்தை பரைசாற்றிவிட்டார். இன்று தனியார் மயம் சந்தைமயத்தின் தலைமையாகத் திகழ்ந்த அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டிலேயே தனியார் நிறுவனங்கள் சரிந்து விழுந்து மீளமுடியாது தவிக்கும் பொழுது, அரசு தலையிட்டு லட்சக்கணக்காக கோடி டாலர்கள் நட்ட ஈடு கொடுத்து காப்பாற்ற வேண்டியுள்ளது. தனியார்மய முழக்கம் ஓழிந்து அங்கே தேசியமய முழக்கம் வெடித்து கிளம்புகிறது. இந்தச் சூழ்நிலையில் மன்மோகன் கும்பல் தனியார்மயம் எனும் பேரில் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு நாட்டைதிறந்துவிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பா.ஜ.க. மற்றம் இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் எதிர்ப்பதுபோல் நாடகமாடுகின்றன. உண்மையில் நாடாளுமன்றவாதக் கட்சிகள் அனைத்தும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் தேசத் துரோக கட்சிகள் தான். அவைகள் நயவஞ்சகமாக மக்களை ஏமாற்றுகின்றன.

மத்திய மாநில அரசுகள் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாற்றுவதை எதிர்த்தும், உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்ளைகள் மூலம் நாட்டின் மருத்துவம், கல்வி, சுகாதாரம் போன்ற சேவைதுறைகளை தனியார்மயம்., வணிகமயம் ஆக்குவதை எதிர்த்து பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளை அரசுடைமையாக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தை தகர்த்தெறிய வேண்டும். மேலும் ஆங்கில மருத்துவம் தான் சிறந்தது. அனைத்து நோய்களுக்கும் தீர்வு காண்பது என்று சொல்வதும் உண்மையல்ல. எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, தோல் நோய்கள் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவம் தலைசிறந்த மருத்துவமாகத் திகழ்கிறது.

 எனவே இன்று நாட்டு மக்களுக்குத் தேவை ஆங்கில மருத்துவம் மற்றும் உள்நாட்டு மருத்துவமுறைகளை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கி வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு ஏகாதிபத்திய ஆதிக்கத்தை வீழ்த்தி நாட்டில் ஒரு உண்மையான சுதந்திர ஆட்சியை மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதன் மூலம் மட்டுமே இதை நம்மால் சாதிக்க முடியும்.

சமுக நலத்திட்டங்களும் தனியார் மயம்

இந்திய அரசு நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மக்கள்; மீது வரிச்சுமைகளைச் சமத்துவதோடு, சமூக நலத் துறைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றதுறைகளைத் தனியார் மயமாக்குவது மற்றும் வணிக மயமாக்குவதன் மூலம் மக்கள் மீது நெருக்கடிகளின் சுமைகளைத் திணிக்கிறது.

       மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகளிலும் தனியார் மயம் மிகப்பெரும் கேடுகளை உருவாக்கிவருகின்றன. மத்திய அரசாங்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைத்து மக்களிடமே கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டு வருகிறது. கொள்ளை நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பதையும் கூட தனியாரிடம் தாரைவார்த்து விட்டது. நோய்த்தடுப்பு மருந்துகளே குழந்தைகளின் உயிரை பலிவாங்குகின்றன. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மருத்துவமனைகளோ, மருத்துவர்களோ கிடையாது. இப்பட்ஜெட்டில் கிராமப்புறங்களில், சிறு நகரங்களில் மருத்துவமனை கட்டுவதற்குத் தனியாருக்கு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளனர். மேலும் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத் என்ற ஒரு மோசடித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவுசார் சொத்துவரிமையை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்துவிட்டு மருந்துப் பொருட்களின் விலையைப் பன்மடங்கு உயர்வதற்கு இந்திய அரசு வழிவகுத்துவிட்டது. இவ்வாறு அரசாங்கம் மருத்துவத்துறையிலும் தனியாரை அனுமதித்து மக்களின் உயிர்வாழும் உரிமையையும் பறித்து வருகிறது.

சுகாதாரத்துறையிலும் இதே நிலைமைகள் தான். குடிநீர் வழங்குவது, நகரைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைத்து வருகிறது. ஆறுகள், குளங்கள் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, குடிநீரும் கூட விலையாக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிறுவனங்களில் வேலை செய்யும் சுகாதாரத் தொழிலாளர்களின் நிரந்தர வேலையும் கூட பறிக்கப்பட்டு ஒப்பந்தமுறை புகுத்தப்படுகிறது.

வீட்டுக்கொரு கழிப்பறைத் திட்டம் செயல்படுத்தப்படவேயில்லை. மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் கொடுமைகள் தொடர்கின்றன.

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் சமுகநலத் துறைகளுக்கு ரூ. 17,000 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறுகிறது. கல்விக்கு 5 சதவீதம், சுகாதாரத்திற்கு 3 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளுக்குப் பதிலாக அதில் பாதி அளவே ஒதுக்கியுள்ளது. மேலும் தற்போது நாட்டின் பணவீக்கத்தையும் கணக்கிலெடுத்தால் உண்மையில் ரூ.17,000 கோடி ரூபாயைவிடக் குறைவாகத்தான் இத்துறைகளுக்குக் கிடைக்கும்.

எனவே கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியார் மயமாக்கிவட்டு, அதிக நிதி ஒதுக்கீடு என்று கூறுவது, மன்மோகன் கும்பல் மக்களுக்கு செய்யும் ஒரு மாபெரும் மோசடியேயாகும். சமூக நலத்துறைகள் அனைத்தையும் அரசாங்கமே ஏற்று, வணிகமயம் ஒழிக்கப்படுவது ஒன்றுதான் உண்மையான சமூக நீதியாகும

       2005ஆம் ஆண்டு புதிய காப்புரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் எய்ட்ஸ் முதல், காசநோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட எல்லா நோய்களுக்கான மருந்துகளும் எட்டாக்கனியாகிவிடும். அது இந்திய மக்களை மட்டுமின்றி மலிவான இந்திய மருந்துகளை சார்ந்து உயிர்வாழும் ஏழை நாட்டு மக்களையும் மரணத்திற்கு தள்ளிவிடும்.

       ஏன்னென்றால் இந்தியாவில் மொத்த மருத்து உற்பத்பத்தியின் கணிசமான பகுதி ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முக்கியமாக யூனிசெப். ஐ.நா. மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் 87 ஏழை நாடுகளில் விநியோகிக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் நுகரப்படும் எய்ட்ஸ் நோய்க்கான மருத்துகளில் 80ு சதவீதமும், எச்.ஐ.வி. கிருமியுடனேயே பிறக்கும் குழந்தைகளுக்கான மருந்தில் 92 சதவீதமும் இந்தியாவிலிருந்து தான் அனுப்பபடுகின்றன. பல்வேறு நோய்களுக்கான மூல மருந்துகளை (ழுநநேசiஉ னுசரபள) இந்திய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு தருவதால்தான் உலகின் மருந்து தொழிற்சாலை , ஏழை நாடுகளின் மருந்துக்கடை என்ற நற்பெயர்களை இந்தியா ஈட்டியிருக்கிறது. இதையெல்லாம் நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

       தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா ஆட்சி புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதிலும், சமூக நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் தனியார்மயக் வணிகமயம் ஆக்குவதில் கடந்த திமுக ஆட்சி போட்ட வழிதடத்திலேயே பயணம் செய்கிறார். மருத்துவதுறையில் அரசு தனியார் பங்கேற்பு ஊக்குவிக்கப்படும் என்று கூறுகிறார். இதன் நோக்கம் படிப்படியாக பொது (அரசு) மருத்துவமனைகளுக்கு மூடுவிழா நடத்தி தனியார் மருத்துவமனைகளுக்க சேவை செய்வதும் மருத்துவ துறையை வணிகமயமாக்குவதுதான். இவ்வாறு மருத்துவம் தனியார் மயமாக்கப்படுவது பாரம்ப‌ரிய சித்தா போன்ற மருத்துவத்திற்கு வேட்டுவைக்கும் திட்டம்தான்.

        தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தை சுகாதார துறையில் முன்னோடி மாநிலமாக மாற்றுவோம் என்றும், சுகாதார துறையில் காலிப்பணியிடங்களை இல்லாத நிலை உருவாக்குவோம் என்று கடந்த சட்டமன்ற கூட்டதொடரின்போது அறிவித்தார் வரவேற்க கூடியதுதான்* அதே நேரத்தில் தமிழக முதல்வர் மத்திய அரசின் திட்டமான அரசு-தனியார் பங்கேற்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தகூடாது. தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் வழங்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசின் அடிப்படை சலுகைகளான வருங்கால வைப்புநிதி, மருத்துவ காப்பீடு போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

       இந்தியாவில் 31 சதவீத மாணவர்கள் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதனை தற்காத்து கொள்வதும் தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் அறிந்தவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் அதே சதவீத ஆசிரியர்களை எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டியுள்ளது. ஐ.நா. ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

       ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (யு என் எப்பிஏ) நடத்திய ஆய்வின் படி பருவக்கல்வி திட்டத்தில் (ஏஇபி) 31 சதவீத மாணவர்கள் ஏஇபி திட்டத்தில் இல்லாத 20 சதவீத மாணவர்களும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றி முழுமையாக தெரிவித்துள்ளனர். அவர்கள் எச்.ஐ.வி. எந்தவித வழிகளில் பரவுகிறது என்பதை அடையாளம் காண்பவர்களாக இருந்தனர்.

       அதே நேரத்தில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எச்.ஐ.வி. வைரஸ் பரவும் நிலை மற்றும் கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து போதிய விழிப்புணர்வு திறன் பெறவில்லை. இவ்விசயம் தொடர்பாக அவர்கள் மேலும் விழிப்புணர்வுத் தகவல்களை அறிந்தும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என நிபுணர்கள் சுட்டிக் காட்டினர். எச்.ஐ.வி. மற்றம் கர்பத்தை தவிர்ப்பது தொடர்பான முறைகளை மாணவர்கள் மிகக் குறைந்த அளவே அறிந்திருந்தனர்.

       தாமாக முன்வந்து எச்.ஐ.வி சோதனை நடைமுறை ரகசியம் காக்கும் உரிமை மற்றும் அது தொடர்பான விசயங்கள் குறித்து மாணவர்களை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டியது என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

       வீடுகளில் மனைவிகளை அடிக்கப்படுவதை குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்கள் நியாயப்படுத்தினர். குறிப்பிட்ட சூழலில் மனைவிகள் அடிக்கப்படுவது நியாயப்படுத்தப்படும் என 40 சதவீத மாணவர்கள் தெரிவித்தனர்.

       ஏஇபி கல்வித் திட்டத்தில் உள்ள 14-18 வயதுக்கு உட்பட்ட பருவ மாணவர்களை மற்றும் மாணவிகள் 19,666 பேரிடமும் ஏஇபி அல்லாத 2301 பேரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 5 மாநிலங்களில் 200 பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்டு அறிக்கை முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

       எனவே எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுவது என்பது தனி நபர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; இது சமூக பொருளாதார காலச்சார அரசியல் பிரச்சனையாகும். எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயை பரவுவதை கட்டுப்படுத்த வேண்டுமானால் வளரும் இளம் பருவத்தினருக்கு பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். பாரதி கூறியதை போல் ‘கற்பு’ என்று வரும்போது அதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவில் வைக்க வேண்டும். நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கலச்சாரத்தை ஒழிக்க வேண்டும். திருமண வயது வந்த ஆண், பெண் இருவருக்கும் தாங்களின் வாழ்க்கை துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை கொடுக்க வேண்டும். மணவிலங்கு உரிமை பெண்களுக்கு குறிப்பாக விதவைகளுக்கு, மறுமணம் செய்துகொள்ளும் உரிமை பெண்கள் கல்வி கற்கும் உரிமை, ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய ஜனநாயக பண்பாட்டை உருவாக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய சீரழிவு பண்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மட்டுமல்ல சமூகத்தில் மற்ற எல்லா சீர்கேடுகளும் ஒழிந்து போகும். அதற்கு புரட்சிக்கர ஜனநாயக சகதிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

- ம‌.சேரலாதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)