இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை விடவும் வெள்ளைப்பூண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் வெள்ளைப்பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தம் கொண்ட ஆயிரக்கணக்கானோருக்கு ஆண்டுதோறும் மாரடைப்பு ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளதாகவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சுமார் 5 மாத காலத்திற்கு தினமும் வெள்ளைப்பூண்டு அடங்கிய உணவினை சாப்பிட்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறையும் என்று தெரிய வந்துள்ளது.

சில நேரங்களில் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் விளைவுகளைக் காட்டிலும்வெள்ளைப்பூண்டு நல்ல பலனைக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)