காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! பார்ப்பன, பனியா, பன்னாட்டு முதலாளிகளுக்கு அல்ல!

காஷ்மீரை விட்டு இந்திய இராணுவமே வெளியேறு!

காஷ்மீரின் தாயக உரிமையான தன் தீர்வு உரிமையை ஏற்றுக்கொள்!

காஷ்மீர் தேசிய இன மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்து!

நாள்: 17.09.2019 செவ்வாய் மாலை 5.30 மணி

இடம்: வெள்ளைமுனியன் கோயில் திடல் கந்தர்வக்கோட்டை

தலைமை: தோழர் பாரி, அமைப்பாளர் மார்க்சியப் பட்டறை

சிறப்புரை: தோழர் அரங்க.குணசேகரன் தலைவர் தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு 370, 35 எ இரண்டும் மோடி அரசால் நீக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு பிரிவுகளும் காஷ்மீரில் தீவிரவாதம் நிலவக் காரணமாகவும், இவைகளை நீக்கியதன் மூலம் நேரு செய்த வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. காஷ்மீரின் வரலாற்றை துளியேனும் அறிந்தவர்க்குத் தெரியும் இக்காரணம் பொய் என்று. நேரு செய்த வரலாற்றுப்பிழையை சரி செய்வது என்பது நேரு காஷ்மீர் மக்களுக்கும் உலகிற்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே. அதற்குப் பதிலாக அரைகுறை அதிகாரத்தையும் குறைப்பதல்ல.

காஷ்மீருக்கான பிரிவு 370 ஐ நீக்குவதும், அம்மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாகத் திரட்டக்கூடாது என்பதும் ஆர்.எஸ்.எஸ்., பி.Nஐ.பி. போன்ற சங்க பரிவார அமைப்புகளின் நீண்டகாலத் திட்டமாகும். எனவே காஷ்மீர் சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர், சட்டமன்ற இல்லா லடாக் ஆகிய இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனை டெல்லியை மாநிலமாக்க போராடிவரும் அரவிந்த்கெஜ்ரிவால், ஆந்திராவின் சிறப்புரிமைக்காக போராடி வரும் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கான சிறப்புரிமைக்காக போராடி வரும் சந்திரசேகரராவ் ஆகியோர் பி.ஜே.பி. க்குத் துணை நின்றனர். இது அவர்களது நலன் சார்ந்த சந்தர்ப்பவாதமாகும். மேலும் பிஜீ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, அதிமுக, காங்கிரசிலுள்ள சிலரும் பி.ஜே.பி. யின் பக்கம் நின்றனர். இவர்களுக்கும் ஜனநாயகத்திற்;க்கும் தொடர்பில்லை என்பதை இது காட்டுகிறது.

                ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற சங்க பரிவாரங்களின் தத்துவம் பார்பனியமே. பார்பனியம் என்பது பார்பனர்களை தலைமையாகக் கொண்ட சாதி அமைபும் அதற்கான தத்துவமாகும் பார்பனியம் என்பது மோதி அழிப்பது முடியாவிட்டால் தின்று செரிப்பது என்ற வழிமுறையை கொண்டது. அதுதான் காஷ்மீரத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

                காஷ்மீரை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டில் எதில் சேர்ப்பது அல்லது தனித்திருப்பதா என்று ப்ரிட்டிஷ் இந்தியாவிலிருந்து விடுதலை பெற்ற காஷ்மீர் மன்னர் ஹரிசிங் குழம்பிப்போய் இருந்தார். நேரு உள்துறை அமைச்சர் பட்டேலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரை சந்திக்கச் செய்தார். கோல்வால்க்கர் மூலம் ஹரிசிங்குடன் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்;தது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைய இருக்கிறது என அறிந்த ஜின்னா பஷ்டூன் பழங்குடிகளுக்கும், காஷ்மீரை பாகிஸ்தானிடம் இணைக்க விரும்பிய போராளிகளுக்கும் ஆயுதங்கள் கொடுத்து காஷ்மீர் மீது படையெடுப்பு நிகழ்த்தினார். அதனைத் தடுக்க ஹரிசிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மௌண்ட்பேட்டனிடம் இராணுவ உதவி கேட்டார். மூன்றாவது நாடு ஒன்றிற்க்கு இராணுவத்தை அனுப்புவதிலுள்ள சட்டப்படியான சிக்கல் பற்றி மௌண்ட்பேட்டன் தன் கருத்தைச் சொல்லி தற்போதைக்கு காஷ்மீரை இந்தியாவுடன் சேருங்கள். பிறகு எந்த நாட்டுடன் இணைவது என்பதை காஷ்மீர் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இதன் படி ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு முறையாக காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

ஹரிசிங் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக காஷ்மீரில் பெரும் போரட்டங்கள் நடந்தன. சேக் அப்துல்லா போன்ற மக்கள் தலைவர்களும் இவ்வொப்பந்தத்தை எதிர்த்தனர். அதே வேளையில் அவர்களுக்கு பாகிஸ்தானிடம் இணையும் விருப்பமுமில்லை இந்நிலையில் அவர்களை அமைதிப்படுத்த யாருடன் இணைவது என்பது பற்றி காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என நேரு காஷ்மீர் மக்களிடமும் ஐ.நா. மன்றத்திடமும் ஒப்பந்தம் செய்தார்.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இந்திய இராணுவம் பஷ்டூன் படையையும், போராளிகளையும் விரட்டியது. காஷ்மீரில் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. முதல் பிரதமராக சேக் அப்துல்லாவும், முதல் ஜனாதிபதியாக ஹரிசிங் மகன் கரண் சிங்கும் நியமிக்கப்பட்டனர். காஷ்மீர் இடைக்கால அரசாங்கத்தில் 370 பிரிவு உருவாக்கப்பட்டு சில திருத்தங்களுடன் இந்திய அரசு மே-27, 1949 இல் ஏற்றுக் கொண்டது. 35 எ பிரிவு 1954 இல் இந்திய ஜனாதிபதி உத்திரவின் பேரில் கொண்டு வரப்பட்டது.

காஷ்மீர்கான சட்டப் பிரிவு 370 என்பது வெளியுறவு, தகவல் தொடர்பு,பாதுகாப்பு ஆகியவைகளுக்கு மட்டுமே காஷ்மீருக்கும் சேர்ந்து இந்தியா சட்டம் இயற்ற முடியும். புpற சட்டங்கள் காஷ்மீரின் அனுமதியுடன் மட்டுமே செயல்படுத்த முடியும். இந்திய அரசு ஒருபோதும் இதனைப் பின்பற்ற வில்லை. பிரிவு 370 படிப்படியாக செயலிழந்த நிலையில் மோடி அதற்கு சடங்குகள் செய்து ஊத்தி மூடினார். இந்திய அரசியல் சட்டத்தின் பின்னிணைப்பான 35 எ என்பது காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்குவதை தடை செய்வது, குடியுரிமையை தீர்மானிப்பது உள்ளிட்ட சில அதிகாரங்களைக் கொண்டாகும். இதற்கு வேட்டு வைத்ததன் மூலம் உள் நாட்டு, வெளி நாட்டு முதலாளிகளுக்கு காஷ்மீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தியா காஷ்மீருக்கும் உலகிற்கும் கொடுத்த வாக்குறுதியை இதுநாள்வரை நிறைவேற்றவில்லை. இதுதான் காஷ்மீர் சிக்கல், எனவே காஷ்மீரின் மலை முகட்டிலும் பள்ளத்தாக்கிலும் எப்போதும் அலை அலையாக ஒலிக்கின்றக் ஓயாத குரல் ஆசாதி காஷ்மீர்! ஆசாதி காஷ்மீர்! ஆசாதி காஷ்மீரே! இதன் பொருள் காஷ்மீர் விடுதலை! காஷ்மீர் விடுதலை! காஷ்மீர் விடுதலையே! இரக்கமற்ற இந்திய ஆட்சியாளர்களின் காதுகளில் இது விழுவதே இல்லை.

“பொது வாக்கெடுப்பு நடத்து, காஷ்மீருக்கு விடுதலை கொடு” எனப் போராடிய மக்கள் மீது ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டம் மூலம் மக்கள் கொன்றழிக்கப்பட்டனர், இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், கைம்பெண்கள், வீடிழந்தோர், அனாதைக் குழந்தைகள் ஏராளம், ஏராளம். மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நே~னல், மற்றும் ஐக்கிய நாடு மன்றத்தின் மனித உரிமை ஆணையம் ஆகியன இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளன.

காஷ்மீரின் முன்னாள் மூன்று முதல்வர்கள் உள்ளிட்ட 800 க்கும் அதிக மானோரை சிறையிலும், வீட்டிலும் தடுப்புக் காவலில் வைத்து விட்டு, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப் போகிறது என நாட்டு மக்களிடம் பொய் சொல்லி விட்டு, இரண்டு கட்டங்களாக அடுத்தடுத்து 38000 இராணுவத்தினரை காஷ்மீரில் நிறுத்தி விட்டு, (7 பேருக்கு ஒருவர் வீதம் உள்ளனர்), காஷ்மீரில் பிரிவு 370 ஐ நீக்கம் செய்வது மாநில அரசின் அனுமதி இன்றி செய்யக் கூடாது என சட்டமும், நீதி மன்றமும் சொன்ன பிறகு, மக்களிடமோ, கட்சிகளிடமோ, நாடாளுமன்றத்திடமோ, ஏன் சொந்த அமைச்சரவைக்கே கூட தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்,பொதுச் செயலாளர் பையாஜி ஜோசியிடம் மட்டும் கலந்து பேசி மோடியும், அமித் ஷாவும் கமுக்கமாக வைத்திருந்து ஆகஸ்டு 5 அன்று குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி சட்டப்பிரிவு 370 ம், 35 எ யும் நீக்கப்பட்டுள்ளன. ஆக இந்தியா உலகில் பெரிய ஜனநாயக நாடு என பீற்றிக்கொள்வதெல்லாம் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றவே. சங்கபரிவாரங்களின் இச்செயலை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கமும், இந்திய பத்திரிக்கையாளர் சங்கமும் கண்டித்து கூட்டாக அறிக்கை விட்டுள்ளது. மேலும் ஐ.எ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனை கண்டு ஹிட்லர் மோடியிடமும், கோயபல்ஸ் அமித்~h விடமும் வெட்கப்படவேண்டும்.

என்றுமில்லாத அளவில் இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. “பொருளாதாரம் கீழ்நோக்கிச்செல்லும்போது படைகள் மேல்நோக்கிச் (காஷ்மீர்) செல்கின்றன” என செய்தியேடுகள் குற்றாய்வுகள் செய்கின்றன. தெற்காசியாவில் இந்தியாவை மத்தியகால போர்ச்சூழலில் மோடி தள்ளிவிட்டு உலகில் வலம்வருகிறார்.

அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது இந்திய அரசின் மொத்த வருவாய் 350 கோடி. இதில் காஷ்மீரை பாதுக்காக்க செலவு 180 கோடி. எனவே காஷ்மீரை தனித்து விடவேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். அம்பேத்கர் பதவி விலகலுக்கான காரணங்களில் காஷ்மீரும் ஒன்று. ஆனால் அம்பேத்கர் கருத்தை பார்ப்பன, பனியா பத்திரிக்கைகள் திரித்துக் காட்டுகின்றன. காஷ்மீரைக் காக்க மக்கள் பணம் ஏன் வாரிக் கொட்டவேண்டும்? காஷ்மீர் மக்கள் உங்களிடம் கேட்டார்களா?

காஷ்மீர் சிக்கலை அம்மக்களின் விருப்பத்திற்கு தீர்க்காமல் இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் பன்னாட்டுச் சூழலுக்கு ஏற்ப அரசியல் செய்கின்றன. ஐ.நா. மன்றமும் அதிலுள்ள நாடுகளும் தங்களது சொந்த வல்லரசிய நலனிலிருந்தே அச்சிக்கலை அணுகி வருகின்றன. இதுவே காஷ்மீர் சிக்கல் நீடிக்கக் காரணம். சுpக்கலை மோடி தீவிரப்படுத்தியுள்ளார்.

ஐனநாயகத்தில் அரசின் எல்லைகள் மக்களால் தீர்மானிக்கப்படுகின்றதே ஓழிய இராணுவத்தால் அல்ல. காஷ்மீர் மக்களின் விருப்பமின்றி இராணுவம் கொண்டு எவ்வளவு காலம் காஷ்மீரை இந்தியா ஆளப்போகிறது?

சுபரிமலையில் பெண்ணுரிமையை மறுத்து, முத்தலாக் சட்டத்தை தடை செய்து பெண்ணுரிமையை மோடி நிலைநாட்டியுள்ளார். 11 மாநிலங்களுக்கு சிறப்புரிமையான சட்டப்பிரிவு 371 ஐ வைத்துக் கொண்N;ட காஷ்மீரின் சிரப்புரிமை 370 ஐ நீக்கியுள்ளார். முதலாளிகள் ஏற்றுமதிக்காக மாட்டைக் கொல்லலாம். ஊழைக்கும் மக்கள் இறைச்சிக்காக மாட்டைக் கொல்லக் கூடாது. மக்கள் தொகையில் 3 விழுக்காடு இருக்கும் பார்ப்பன உயர்சாதிக் கூட்டம் உயர் பதவிகளில் 98 விழுக்காடு இருக்கும்போதே அதிலுள்ள வறிய பிரிவினர்க்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு. இப்படி மோடியின் பார்ப்பன-பனியா சேவையை அடுக்கலாம்.

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே அடையாள அட்டை, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே தேர்வு எனக் கூச்சலிட்டு சூலாயுதத்துடன் வரும் இக் கூட்டம் “இந்திய நாட்டுற்குள் ஏன் இன்னுமொரு தமிழ் நாடு” என நாளை கேட்கும்.

காஷ்மீர் இந்திய மக்களிடமிருந்தும், உலகத்திலிருந்தும் தற்போது மோடியால் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்து என்றப் பார்ப்பனியம் பிறவற்றை தின்று செரித்ததுபோல காஷ்மீரை செரிக்க இயலாது. காஷ்மீர் உறையும் பனி அல்ல... எரியும் பனி. அது பார்ப்பனிய இந்திய வயிற்றை தீய்த்துக் கிழித்து விடுதலை பெறும்.

- பாரி, அமைப்பாளர், மார்க்சியப் பட்டறை