may17 against modi


The corrupt, super rich 1% have safely hoarded their money abroad while we the 99% are treated and humiliated as criminals!!Lets join hands against the madness of demonetisation unleashed by the government in the name of fighting against corruption.

நம்மை குற்றவாளிகளாக நடத்தி, கார்ப்பரேட், தனியார் வங்கிகளுக்கு நாம் உழைத்து சேமித்த பணத்தை தாரை வார்க்கும் 'சர்வாதிகாரி' மோடி பாஜக அரசிற்கு எதிராகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க நவம்பர் 20 மாலை வள்ளுவர் கோட்டத்தில் நிகழும் மக்கள் திரள் கூட்டத்தில் பங்கெடுக்க வாருங்கள். அடிமைக் கூட்டங்களாய் நடத்தப்படுவதை எதிர்ப்போம்!

வரும் நவம்பர் 20ம் தேதி மாலையில், மக்களை குற்றவாளிகளாய் நடத்தி, பணக்காரர்களுக்கு பங்காளி வேலை பார்க்கும் பாஜக மோடி அரசுக்கு எதிராய், உழைக்கும் மக்களுக்கு துணையாய் குரல் கொடுக்க வீதிக்கு வா. வள்ளுவர் கோட்டத்தில் சந்திப்போம். ஏழை எளியவருக்கு, வறியோர், உழைப்போருக்கு ஆதரவாய் நாம் நிற்காவிடில் யார் நிற்பார்.? இன்று போராடவில்லையெனில் என்று போராடுவது. இதற்கு மேலும் இந்த அக்கிரமங்களை பொறுக்க இயலாது. நம் முழக்கம் தில்லி ராஜ்யத்தின் திமிரை உடைக்கட்டும்! போராட வா தோழா. நண்பர்களோடு களத்துக்கு வா!

நவம்பர் 20, ஞாயிறு, மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை. தொடர்புக்கு - 9884072010

- மே பதினேழு இயக்கம்