1. தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம்
"வல்லாதிக்க, சாதிய எதிர்ப்பில் தமிழ்த் தேசியம்" இந்திய வல்லாதிக்கமும் உலக வல்லாதிக்கங்களும் -- இந்தியத் தேசியத்தின் வீழ்ச்சியும் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் -- வல்லாதிக்கமும் சாதியமும் -- வல்லாதிக்க எதிர்ப்பும் சாதிய எதிர்ப்பும் -- விடுதலையின் இரட்டைக் குறிக்கோள்கள்.
2. தோழர் அ. அருள்மொழி, கொள்கைபரப்புச் செயலாளர், திராவிடர் கழகம்
"இந்துத்துவச் சூழலில் அம்பேத்கரும் பெரியாரும்"
மோதி ஆட்சியில் இந்துத்துவப் பரவல் -- பார்ப்பனிய எதிர்ப்பில் அம்பேத்கர்-பெரியார் -- அம்பேத்கர்- பெரியாரின் இன்றைய பொருத்தப்பாடு. 3. கு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,
"கல்வி: காவிமயமும் உலக மயமும்"
கல்வித் துறையில் ஊடுருவும் இந்துத்துவம் -- கல்வி வணிகமயமும் உலகமயமும் -- உலகச் சந்தையில் சரக்காக மாறும் கல்வி -- தமிழகக் கல்விக்கு எழுந்துள்ள ஆபத்துகள்.
4. பேராசிரியர் தா. அபுல் பாசல், மாநிலச் செயலாளர், தமுமுக
"மியான்மர்: இசுலாமியர் கொலையும் வல்லாதிக்கமும்"
மியான்மர் வரலாற்றில் ரோகிங்கா இசுலாமிய இனத்தின் மீது வன்முறை -- ரோகிங்கர்களும் வங்க தேசமும் -- பர்மிய பௌத்தமும் சிங்கள பௌத்தமும் -- ரோகிங்கர் இனக் கொலையும் உலகின் பாரா முகமும் -- விடிவுக்கு வழி என்ன?
5. தோழர் மு. வீரபாண்டியன், மாநிலத் துணைச் செயலாளர், இந்திய கம்யுனிஸ்டுக் கட்சி
"சாதியக் கொலைகளும் சாதிச் சங்கங்களும்"
இளவரசன் முதல் கோகுல்ராஜ் வரை -- சாதிய வன்முறையும் சாதிச் சங்கங்களும் -- சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய தேவை -- சனநாயக ஆற்றால்களின் கடமை.
6. தோழர் வே.பாரதி, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
"இலங்கைத் தேர்தலும் தமிழீழமும்"
இலங்கையில் இன்னுமொரு தேர்தல் -- சிங்களக் கட்சிகள், தமிழ்க் கட்சிகளின் நிலை -- இனக்கொலைக்கு நீதி -- ஐ.நா. அரங்கம் -- தமிழகத்தின் கடமை -- அரசியல் தீர்வுக்குத் தேர்தலா, பொது வாக்கெடுப்பா?
ஒவ்வொரு தலைப்பிலும் மேற்சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் உரையாளர்களின் ஆய்வுரை அமையும். அவர்களுக்கு நிதானமான நேரம் தருவதுதான் பயன் தரும். அதற்கு நீங்கள் குறித்த நேரத்திற்கு தவறாமல் வந்து நிகழ்வை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.