அமைதிக்கானத் தேடுதலில்
தொலைத்துவிட்டேன்
Musicஎன்னிசையை
காலங்களின் பயணங்களின்
மின்ரயில்களின் பேரோசையில்
வாகனங்களின் ஒலிப்பான்களில்
கேட்க மறந்துவிட்டேன்
இதுகாறும் பறவையின் இசையை

தொட்டிச் செடிகளின் சங்கீதம்
புரியாமல் போனது
இக்காலம் வரையில்
அறிந்தேனில்லை
ரயிலில் பாடி
யாசிக்கும் சின்னஞ்
சிறுமியின் குரலில்
வழியும் தேனின்ருசி.

மாநகர இரைச்சலூடே
கவனிப்பாரின்றி காற்றில் சிதறுகிறது
குழல் விற்பவனின்
மூங்கில் கானம்.
மஞ்சள்வழியும்
பெருநகர ஒளிவிளக்குகளின்
நிழல்களில் தேடுகிறேன் என் அமைதிக்கான
சிற்றகல் சுடரை.

அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.