அன்றொரு நாள் கண்ட கனவொன்று
அறியாமலே வளர்ந்து எழுந்து நின்று
அழகாய் என் கண்முன் நடனம் ஆடும்
அதிசயம் கண்டு மகிழ்ந்தேன் நானும்

கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பங்கள்
காலத்தில் ஒளிந்திருக்கும் நிகழ்வுகள்
சொல்லுக்குள் நிறைந்த வண்ணங்கள்
நல்லுணர்வாய் நதியாய் எண்ணங்கள்

சில விதைகள் பயிராகி பலன் தரும்
பல விதைகள் ஆழத்தில் புதைந்திடும்
நிலத்தில் விதைத்திட்டவன் மறந்தும்
கோலத்தின் நெளிவுகளாய் ஆதியும்

அந்தமும் இல்லாத கால வெளியின்
சந்தத்தில் முளைக்கின்ற சங்கீதத்தின்
நாதங்கள் இன்று ஒலிக்க, வாழ்வின்
வினோதம் தெரிந்தேன்,தெளிந்தேன்!

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)