புரிந்துகொள்ள முயற்சித்தேன்
பலரின் மவுனங்களை.
காரணங்கள் தேடித் தேடி
களைத்து விட்டது
கபாலத்தின்
மண்டை ஓடுகள்.
நட்பு என்றும் காதல் என்றும்
கொள்கை என்றும் தோழமை என்றும்
தமிழன் என்றும் இந்தியன் என்றும்
உறவுகள் என்றும்
உன்னதமாக போற்றிப் புகழப்பட்ட
தருணங்கள்
வெறும் கனவுகள் அல்ல
மீண்டும் மீண்டும்
எத்தனையோ சமாதானங்களை
எடுத்து வைத்து
காத்திருக்கும் போது
பளிச்சென
இருண்டவானத்தில்
இடியுடன் விழுகிறது
எரிதழலாய் மின்னல்
என் முப்பாட்டன்
நந்தனை எரித்த
தீயின் மிச்சமாய்.
பலரின் மவுனங்களுக்கான
காரணங்களைப் புரியவைக்க!.


- புதிய மாதவி, மும்பை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)