விவரங்கள்
பாண்டித்துரை
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 11 ஏப்ரல் 2010
கடவுளின் பி(மு)ன்னே சாத்தான்
அச்சிடுக
நிலைக்கண்ணாடியில்
சாத்தானை தரிசித்தபடி
புணரும் பொழுதின்
நீட்சியாய்
ஆலயம்யாவும்
கடவுளை தரிசித்தபொழுது
பயபக்தியுடன்
சூம்பிப்போன சாத்தான்
தெரிவதில்லை
குட்டப்பனிடம் சொல்லி
பீடத்திற்கு பின்
நிலைக்கண்ணாடி ஒன்றை
வைக்க வேண்டும்.
-
பாண்டித்துரை
(
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
)