பறத்தலில்
திளைத்த
பறவைகள்
இப்போதெல்லாம்
கூடுகளில்
கவனம் கொள்வதில்லை..
சிறகுகள் தீண்டும்
வானம் விரிய விரிய
சிதறி சீர் குலைகிறது
சிறுகுருவிகளின் கூடு....

- அருணா சுப்ரமணியன்