தானம் கொடுக்க
முன் கை நீண்டதும்
செல்பி எடுக்க
முழங்கையும்
நீண்டு விடுகிறது
தன்னிச்சையாக
நவீன கர்ணர்கள்......
------
ஒவ்வொரு வருடமும்
தவறாமல்
கரைந்துவிடுகிறார்
களிமண் பிள்ளையார்
கஷ்டங்கள் மட்டும்
கரையாமல்
அப்படியே பிடித்து வைத்த பிள்ளையாரைப்போல...
- மு.கௌந்தி