இருளே இந்த பிரபஞ்சத்தில்
நிஜமும், நிரந்தரமும்..
வெளிச்சம் - ஒளிக்கீற்று
அதன் ஊடாய்ப் பரவவிடும்
தற்காலிக மாயை..
ஆனாலும், வெளிச்சமே
வரமாயிங்கு வரவேற்கப்படுகிறது..!
நிஜமும் நிரந்தரமுமான இருள்,
அச்சமூட்டுவதாலோ என்னவோ
நேசிக்கப்படுவதேயில்லை..
எங்கேயும், எப்போதும், யாராலும்..!

- ஆ.மகராஜன், திருச்சி.