இரவின் நிசப்தத்தில்
தனித்தலைகிறது கண்கள்!
நறுமணம் மிக்க மலொரன்றை
சுமந்து திரிகிறது தென்றல்!
ஜன்னலில் சில்லென்ற
மூடுபனியின் மென்தாக்குதல்கள்!
சாளரம் வழியே ஒலிக்கும் பாடலின்
மிதமிஞ்சிய இராப்பொழுதுகள்!
இக்கணத்தில் தொலைதூரத்தில்
புதுப்புது அர்த்தங்கள்!
பின்பு வழமை போலவே,
தூக்கமில்லா இவ்விரவில்
காற்றில் மிதக்கிறது மனவிரல்கள்!
- ஆனந்தி ராமகிருஷ்ணன்