கருப்பை இல்லாமலும்
குழந்தைகளை சுமக்கிறது
அனாதை இல்லம்
***
பத்திரமாய் இருக்கிறது
பறவைக்கூட்டில்
இறகுபந்து
***
இலைகளும் இல்லை
பழங்களும் இல்லை
மான் கொம்பில் குருவி
***
அலைபேசி அழைப்பிற்காக
மரத்தடியில் ஒதுங்குகிறேன்
ஆஹா குயிலோசை
***
கம்பத்தின் மேல் வித்தை
கரகோஷம் வாங்கும்
தேசியகொடி
***
ஆற்றங்கரையோர மரம்
இலைகள் உதிர்த்து
விடுகிறது மழைக்கான தூது
***
அக்கம்பக்கம் வாங்கிய
கஞ்சியுடன் நெசவாளி
காலை சுற்றும் நாய்
- பானால்.சாயிராம்